Sunday, October 24, 2010

முனைவர். க. பத்மநாபன்,
ம்யுட்சென்டார்ப்ஸ்டீட் 46, 22179 ஹேம்பர்க், ஜெர்மனி.

தொலைபேசி எண்: +49 40 642 028 36
மின்னஞ்சல்: drkpadmanaban@gmail.com

Friday, October 8, 2010

நூதனமாகக் காத்திருப்பதை விட அவளுக்கு வேறு வழியில்லை. அவளுக்குத் தனது நகங்களால் அவனது முகத்தில் பிரான்டலாம் போலிருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவனைக் காயப்படுத்த அவள் விரும்பவில்லை. அவனது அழகான முகத்தை எப்படி பிராண்டமுடியும் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். ராமன் முதலில் பாம்பனுக்குப் போய்விட்டு இறுதியாக ராமேஸ்வரம் கோவிலுக்கு டிரைவரைக் காரை ஓட்டச் சொன்னான். கார் எதுவரை போகமுடியுமோ அது வரை அவர்கள் சென்றார்கள்.

அங்கு ஏறக்குறைய ஒன்றுமேயில்லை. இந்தக் காடுகளை நன்றாக அடர்த்தியாக்கலாம். இன்னும் பல காரியங்களை இங்கு செய்யலாம் என்று அவன் எண்ணினான். இந்த இடங்களுக்கெல்லாம் ராமர் தீவின் பகுதியாக ஆவதற்கு நல்ல தகுதி இருக்கிறது என்று எண்ணினான். இதை அவன் கீஎதாவுக்கு அர்ப்பநித்திருப்பதையும் நினைவு கொண்டான் ராமன். இந்தச் செய்தியை ராமேஸ்வரத்தில் வைத்து அவளிடம் சொல்ல அவன் விரும்பவில்லை. மதுரையில் வைத்துத்தான் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தான். "நான் ரயில்வே ஸ்டேசனுக்குப் போவதற்கு முன்னாள் அவளிடம் சொல்வேன்", என்று நினைத்தான்.

"உங்களுக்கு எல்லாமே தெரியும் போலிருக்கிறதே. ராமேஸ்வரத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்", கீதா ராமனைக் கேட்டாள்.

அவன் அவளை இனிமையான புன்முறுவலுடன் பார்த்தான்.

"ராமேஸ்வரத்தில்தான் ராமர் தனது மனைவி சீதையை இலங்கையின் இராவணனிடமிருந்து காப்பாற்ற கடலுக்கு மேல் பாலத்தைக் கட்டினார். இங்குதான் ராமன் சிவனைத் தொழுது இராவணனைக் கொன்ற பாவத்தையும் கழுவிப் போக்கினார். எல்லா இந்துக்களும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகிறார்கள். இதை தென்னகத்தின் வாரணாசி என்று கூறுகிறார்கள். வாரணாசிக்கு புண்ணிய யாத்திரைக்குப் போய்விட்டு ராமேஸ்வரத்திற்குப் போகாவிட்டால் இந்தப் புண்ணிய யாத்திரை முழுமையானது ஆகாது", ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்தான் ராமன்.

"மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் கீழ்ப்பகுதியில் இருப்பதுதான் ராமேஸ்வரம் என்னும் தீவு", என்றான் ராமன்.

ராமனுடைய ஆழமான அறிவைக் கண்டு வியந்தாள், பெருமைப்பட்டாள் கீதா. ஆனால் அவளுக்கும் அவனை புகழ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை.

"நீ என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?" ராமன் கேட்டான்.

"இல்லை, நீங்கள்தான் நேற்று இரவு கனவு கண்டு கொண்டிருந்தீர்கள் என்று நான் எண்ணினேன். ஐந்து மணி நேரங்கள் நான் உங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்", பதிலளித்தாள் கீதா.

"அப்படியா?" என்றான் ராமன்.

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

"இங்குள்ள கடவுளைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றாள் கீதா.

திரும்பவும் அவன் அவளைப் பார்த்து அழகாக சிரித்தான்.

"இங்குள்ள முக்கியக் கடவுள் ரங்கநாதரின் லிங்கம்தான். இது இந்தியாவிலுள்ள முக்கியமான 12 லிங்கங்களில் ஒன்று", விளக்கினான் ராமன்.

"மிகவும் அற்புதம். நீங்கள் என்னிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டால் உடனே உங்களைத் திருமணம் செய்துகொள்வேன்", என்றாள் கீதா.

அவளது முகம் சிவந்தது. தனது முகத்தை அவன் பார்க்காமலிருக்க அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவன் அதற்குப் பதில் கூறுமுன் ராமேஸ்வரம் கோவில் வந்துவிட்டது.

புதுக்கொபுரம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமானதாக இருந்தது. இந்தியாவிலுள்ள எல்லா மக்களையும் அங்கு காண முடிந்தது. எல்லோரும் தாங்கள் செய்யும் வேலைகளில் கோவிலைப் பார்ப்பது, புனித நீராடுதல் மற்றும் பூஜை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய கனவு நகரம் இங்குதான் உருவாகி இந்தியாவை எல்லா வகைகளிலும் மேலும் பலப்படுத்தும் என்று எண்ணினான் ராமன். உலகப்படத்தில் இதற்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்படும். எல்லோரும் இங்கு வர விரும்புவார்கள். இந்தியாவின் வருங்கால ராமர்தீவைப் பற்றி நினைக்க நினைக்க ராமன் மிகவும் பெருமையடைந்தான்.

கீதாவின் குரலை கேட்டவுடன்தான் தனது நினைவுகளிலிருந்து வெளியே வந்தான் ராமன்.

"நீங்கள் இப்படி நின்று கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களையும் ராமேஸ்வரத்திலுள்ள ஒரு கடவுள் என்று நினைக்கப்போகிறார்கள்", என்றாள் கீதா.

இனிமையான சிரிப்புடன், "நாம் இப்பொழுது கோவிலுக்குள் போவோமா?" அவனைப் பார்த்துக் கேட்டாள் கீதா.

ராமன் அவளை முழித்துப் பார்த்தான். "கோவிலுக்குள் நாம் போக வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. நாம் ஊருக்குத் திரும்பிப் போவோம். இன்னொரு தடவை நமது வாழ்வில் நிச்சயம் இங்கு வருவோம். அப்பொழுது நீ கோவிலுக்குள் போகலாம்", என்றான் ராமன்.

அவனது குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று கீதா எண்ணினாள். ஆனால் அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விபரங்களைத் தெரிந்து கொள்ள மறுநாள் வரை காத்திருக்க அவள் முடிவு செய்தாள்.

"கடந்த நாட்களில்தான் நான் அவனை நன்றாக புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றே முடிவு செய்திருப்பேன்", கீதா நினைத்தாள். அவன் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பயங்கரப் பசி. அவர்கள் எங்காவது சாப்பிடுவது என்று முடிவு செய்தார்கள்.

இரவு 10 மணிக்கு அவர்கள் மதுரை திரும்பினார்கள். பாட்டியும் அவர்களைத் திரும்பவும் சந்தோசமாக வரவேற்றாள். அவர்கள் பாட்டியின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். அவன் விருந்தினரின் அறைக்குள் நுழைந்த பொழுது இரவு மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. படுக்கையில் படுத்தபடியே அவன் கடந்த ஏழு, எட்டு நாட்களைப் பற்றி எண்ணினான். இனிமேல் தனது வாழ்க்கை முன்பிருந்ததைப் போலிருக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் கீதாவை மணக்க, தான் ஒரு செத்த எலியைக் கூட விழுங்கத் தயங்கப் போவதில்லை என்று முடிவு செய்தான். அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவளுடன் என்ன, எப்பொழுது, எப்படிச் சொல்வது என்பதே அவனது தீர்க்கமுடியாத பெரிய பிரச்சினையாக இப்பொழுது இருந்தது. எந்தவிதக் கனவுமில்லாமல் அன்று அவன் நன்றாகத் தூங்கினான்.

"நாளை எனது வாழ்வில் ஒரு முக்கியமான நாள். அவன் என்னைக் காதலிக்கிறான். ஆனால் அவன் சொல்ல வெட்கப்படுகிறான்", நினைத்தாள் கீதா. அவளது அறையில் அவளுக்கு மறுநாள் வரை காத்திருக்கப் பொறுமையில்லை. இந்த இரவிலும் அவளுக்கு அதிக நிம்மதியில்லை. ராமன் வாயைத் திறக்காவிட்டால் நானே அவனிடம் சொல்வேன் என்று நினைத்தாள் கீதா. இந்தச் சிந்தனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளும் தூங்கினாள். அப்பொழுது நேரம் காலை 4 மணி.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

அலுமினியம் எங்கும் இருக்கிறது – உணவு, குடிநீர், காற்று மற்றும் நாம் உபயோகப்படுத்தும் பல பொருட்களிலும் இருக்கிறது. அளவிற்கு மேல் உடம்பில் அலுமினியம் இருந்தால் அது நச்சுத்தன்மை உடையது.

கீழ்க்கண்ட பொருட்களில் அதிக அளவில் அலுமினியம் உள்ளது. அவை:

உணவு – பொதுவாக எல்லா உணவுப்பொருட்களிலும் குறைந்த அளவில் அலுமினியம் இருக்கிறது. தேயிலை, வெள்ளரிக்காய், மசாலாப்பொருட்க்கள், மூலிகைகளில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. இப்பொருட்களில் அலுமினியம் மற்ற பொருட்களுடன் சேர்ந்திருப்பதால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதில்லை. தேயிலை, காப்பி, தானியங்கள் மற்றும் மென்குடிபானங்களில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனப்பொருட்களான E173, E541, E554 மற்றும் E556 களில் அலுமினியம் அல்லது அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. தாய்ப்பாலோடு ஒப்பிடும்பொழுது பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 10 முதல் 20 பங்கு அலுமினியம் கூட இருக்கிறது. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 100 பங்கு வரை அதிகம் அலுமினியம் இருக்கிறது. சமையல் சோடா பொடியில் (baking powder) மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

குடிநீர் – குடிநீரில் மிகக்குறைந்த அளவில் அலுமினியம் உள்ளது. ஆனால் இது இலகுவாக இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. பல நாடுகளில் கலங்கிய குடிதண்ணீரை சுத்தப்படுத்த அலுமினியம் உப்புக்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தக் குடிநீரில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கும். குடிநீரைச் சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் பல வடிகட்டிகள் (filter) அலுமினியத்தை நிறுத்துவதில்லை.

அலுமினியம் சமையல் பாத்திரங்கள் – பொதுவாக அலுமினியம் சமையல் பாத்திரங்கள் மோசமானவையில்லை. அதிக அமிலமுடைய உணவுப்பொருட்களைச் சமைக்கும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அதிக அளவு அலுமினியம் வெளியேறி உணவில் கலக்கிறது.. ஆகையால் அலுமினியம் சமையல் பாத்திரங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல முறையில் சமைக்க பல சிறந்த பாத்திரங்கள் இப்பொழுது கிடைக்கின்றன.
சிப்பத்திற்கு உதவும் அலுமினியப் பொருட்கள் – சிப்பதிற்கு உதவும் அட்டைப் பெட்டிகள், தகர டப்பாக்களின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியத் தகடு ஒட்டப்படுகிறது. இவைகளில் மிகக் குறைந்த அளவிலேயே அலுமினியம் இருக்கிறது. ஆனால், அமிலமுள்ள உணவு அலுமினியப் பாத்திரத்திலோ அல்லது அலுமினியத் தாளில் சுற்றப்பட்டுச் சமைக்கப்பட்டாலோ அலுமினியம் உணவுக்குள் சென்று விடும்.

மருந்துகள் – அல்சர் மற்றும் அஜீரணத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகளில் அதிக அளவில் அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. பொதுவாக இதிலிருந்து குறைந்த அளவிலேயே அலுமினியம் உறிஞ்சப்படும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி மாத்திரையையும் வைட்டமின் சி அதிகமுள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்கும் டியோடோரன்ட்களிலும் அதிகம் அலுமினியம் உப்புக்கள் உள்ளன. அலுமினிய உப்புக் கட்டிகளும் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில ஷாம்புகளிலும் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

அலுமினியம் அதிகமுள்ள தேநீர், வெள்ளரிக்காய் முதலியவைகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்க்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. முக்கியச் சாப்பாட்டோடும் அலுமினியம் அதிகமுள்ள பொருட்களை தவிர்க்கவேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழுங்களைச் சாப்பிட வேண்டும். இதனால் இரும்புச்சத்து சுலபமாக இரத்ததிற்குள் போகும்.

தக்காளி, மற்றும் புளி சேர்ந்த உணவுகளை அலுமினியச் சட்டிகளில் சமைக்காதீர்கள். இதனால் சட்டியிலிருந்து அதிக அளவில் அலுமினியம் உணவுக்குள் போகும்.


எங்கிருந்து அலுமினியம் வருகிறது என்று தெரிந்தால் அதைத் தவிர்ப்பது எளிது.

Wednesday, October 6, 2010

இரும்பு நமக்கு மிகவும் தேவையான உலோகம். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க இரும்பு அவசியம். சிவப்பு இரத்த அணுக்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் பிராணவாயுவை எடுத்துச் சென்று சக்தியை உருவாக்க மிகவும் முக்கியமானது.

அலுமினியம் உடம்பிற்கு தேவையில்லாத உலோகம். பல பத்தாண்டுகளாக அலுமினியம் சிறுகுடலில் இருந்து உறிஞ்சப்படாது என்று எண்ணப்பட்டது. இரத்தத்தில் குறைந்த அளவு அலுமினியத்தை அளக்க சரியான வழிமுறையில்லாததால் இவ்வாறு எண்ணப்பட்டது. இன்று AAS மற்றும் ICP-MS கருவிகளால் மிகக்குறைந்த அளவு அலுமினியத்தை இரத்தத்தில் மிக துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

இரும்புச்சத்திற்கும் அலுமினியத்திற்கும் எந்தவிதமான உறவும் இல்லாவிட்டால் எங்குதான் பிரச்சினை இருக்கிறது? ஆமாம், ஒரு பெரிய பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இரும்புச்சத்தும் அலுமினியமும் சிறுகுடலில் இருந்து இரத்தத்திற்குச் செல்லும் வழி ஒரே வழிதான். இரும்புச்சத்தை உறிஞ்ச வைட்டமின் சி தேவை. இதே வைட்டமின் சி அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கும் தேவைப்படுகிறது. எளிதான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உணவில் அதிக அளவில் அலுமினியம் இருந்தால் வைட்டமின் சி யும், எடுத்துச் செல்லும் புரதமும் சிறு குடலில் இருந்து அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கு சாதகமாக இருக்கின்றன. இதன் விளைவு உடம்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை.

இரும்புச்சத்து பற்றாக்குறையால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அலுமினியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை நாம் தவிர்க்கவேண்டும். பல வழிகளில் இருந்து வரும் அலுமினியம் அசுத்தமும் ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த இரண்டு பிரச்சினைகளையும் தவிர்த்தால் இரும்புச்சத்து நன்றாக உறிஞ்சப்பட்டு நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

ராமன் தனது பெட்டியிலிருந்து தாளை எடுத்துத் தனது கனவைப் பற்றி எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு சிறு விஷயங்களையும் அவன் விளக்கமாக எழுத விரும்பினான். எதையாவது எழுத மறந்து விடுவோமோ என்று நினைத்துப் பயந்தான். அவன் நிறுத்தாமல் எழுதிக் கொண்டேயிருந்தான். திடீரென்று கீதா அவன் முன்னால் வந்து நின்றாள்.

"என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள். "நான் மறக்கக்கூடாத சில விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்", ராமன் பதிலளித்தான்.

"அதை இப்பொழுது நான் பார்க்கவேண்டும்", என்று முனுமுனுத்தாள் அவள்.

"முடியாது, நாளை அல்லது நாளை மறுநாள் வரை நீ காத்திருக்கவேண்டும்", புன்னகையுடன் பதிலளித்தான் அவன்.

முதன்முதலாக அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது பெட்டியை அடுக்கத் தொடங்கினாள். ராமன் எழுதி முடித்தான். தாள்களைப் பத்திரமாகத் தனது பெட்டியில் வைத்துப் பூட்டினான். அதன் பிறகு அவன் குளியலறைக்குச் சென்றான். அன்று அவன் காலையுணவு சாப்பிடவில்லை. அவனுடைய இந்த வினோதமான நடத்தையை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மதுரை விமான நிலையத்தில் அவர்களது விமான நிலையம் இறங்கியது. ஒரு டாக்சியில் ஏறி பாட்டி வீட்டை அடைந்தார்கள். பாட்டியும் அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். அவள் மகன் அருநாச்சலத்திடமிருந்து அவர்கள் வருவது பற்றிய தகவல் அவளுக்கு முன்பே கிடைத்துவிட்டது. பாட்டி விடாமல் தொடர்ந்து அவர்களை ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தாள்.

சாப்பிட்டு முடிந்தவுடன் தான் மறுநாள் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்ல விரும்புவதாகக் கூறினான் ராமன். இது கீதாவிற்கு எதிர்பாராட ஆனால் மகிழ்ச்சியான ஆச்சரியத்தை உண்டாக்கியது. உடனே அவள் ராமேஸ்வரத்திலுள்ள அந்த அழகான கோவிலைப் பற்றி எண்ணினாள். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கீதாவும் சரி என்று கூறினாள்.

"பாட்டி நீங்களும் கூட வாருங்கள்?" என்று கீதா கேட்டாள்.

ஆனால் பாட்டி நாள் முழுவதும் பிரயாணம் செய்ய விரும்பவில்லை.

"ராமனோடு நல்ல பிக்னிகிக்குப் போய்விட்டு வா. அதற்குத் தேவையானதெல்லாம் நான் தயார் செய்கிறேன்", விளக்கம் காணமுடியாத புன்னகையுடன் பதிலளித்தாள் பாட்டி.

கீதாவும் ராமனும் மறுநாள் காலையில் டாக்சியில் கிளம்பினார்கள். காரின் டிரைவர் கீழக்கரையைச் சேர்ந்தவர்.

"எனக்கு இங்கு எல்லா இடங்களும் தெரியும். உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். நான் அதன்படி போகிறேன் ஐயா", என்றார் டிரைவர்.

"கீழக்கரை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மண்டபம், இருமேனி, பானல்க்குளம் மற்றும் தேவிப்பட்டினம் வழியாகக் காரை ஒட்டுங்கள். நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க விரும்புகிறோம். இறுதியாக ராமேஸ்வரம், பாம்பனையும் சென்று பார்க்கவேண்டும்", என்று பதிலளித்தான் ராமன்.

"சரி", என்றார் டிரைவர். காரும் நகர ஆரம்பித்தது. அவன் சொன்னது ஒன்றும் கீதாவிற்குச் சரியாக புரியவில்லை. அவன் இந்த ஊர்களிலெல்லாம் எதைப் பார்க்க விரும்புகிறான் எனத் தனக்குள் கேட்டுக்கொண்டாள். இதற்கான பதில் எனக்கு இன்று கிடைக்கும் அல்லது நாளை கிடைக்கும் அல்லது மதுரை திரும்பிச் சென்ற பிறகு இரவிலும் கிடைக்கலாம் என்று அவள் எண்ணினாள். அவளுக்கு எல்லாமே மர்மமாக இருந்தது. ராமன் ஒரு புதுமையான ஆனால் வித்தியாசமான மர்ம மனிதனாக அவளுக்குத் தோன்றினான். ஏதோ ஒரு பெரிய திட்டத்தை நடத்தப் போகிறான் அல்லது ஒரு வேலை இதெல்லாம் அர்த்தமில்லாத வேலையாகவும் இருக்கலாம் என்று எண்ணினாள் கீதா.

அது ஒரு நல்ல நாள். அன்று முழுவதும் அவர்கள் காரிலேயே சுற்றி வந்தார்கள். அதே நேரத்தில் அது ஒரு கடினமான நாளும் கூட. ஆனால் எல்லா இடங்களையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். ராமன் கடலை மிட்டாயைச் சாப்பிட்டான். கீதா ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டாள். நாள் முழுவதிலும் இரண்டு அல்லது மூன்று இளநீரையும் குடித்தார்கள். டிரைவரும் பல கிளாஸ் தேநீரைக் குடித்திருந்தார்.

"எனக்கு இப்பொழுது ஒரு நல்ல எண்ணம் உண்டாகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த நாட்டிற்கு மிகவும் அருமையான இடமாகும்", என்றான் ராமன்.

"நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனக்கு இந்த விஷயங்களெல்லாம் விளங்கவேயில்லை", என்றாள் கீதா.

"இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள். அதன்பிறகு நான் எல்லாவற்றையும் உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்", என்றான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, October 5, 2010

தத்துவப்படி இது சரியே. ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதிக அளவில் எல்லா உலோகங்களும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே. இரும்புச்சத்தினால் ஹீமோகுளோபின் அளவைக் கூட்ட முடியும். பொதுவாக இது நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே இரத்தத்திற்குள் செல்வது நல்லது.

நீங்கள் இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட்டால் இரத்தத்திற்குப் போகும் எல்லா இரும்புச்சத்தும் ஹீமோகுளோபினாக மாற்றப்படாது. அளவுக்கு அதிகமான
இரும்பு இருதயம், சிறுநீரகங்கள், ஈரல் மற்றும் பல உறுப்புக்களிலுள்ள தசைகளில் படிகிறது. நமது உடம்பின் வெப்பம் 37° செல்ஸியஸ். மேலும் உடம்பில் தேவையான அளவில் தண்ணீர் இருக்கிறது. இதனால் தசைகளில் படிந்த இரும்பு துருப்பிடிக்கிறது. இதனால் உடம்பில் அளவுக்கதிகமாக நச்சுத்தன்மை வாய்ந்த, வினை வீரியம் கொண்ட ஹைட்ராக்சில் ஃப்ரிராடிக்கல் (Free Radicals) பெண்டன் இயக்கத்தால் உண்டாகிறது. ஃப்ரிராடிக்கல் நது உடம்பிற்கு மிகவும் முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அளவிற்கு அதிகமாக இருந்தால் இவை நமது மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைத் தாக்கி நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

இரும்புச்சத்து மாத்திரைகளை 14 நாட்களுக்கு எந்த விதமான பிரச்சினையுமில்லாமல் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட வேண்டுமென்றால், மருத்துவரின் அனுமதியோடு, அவரின் தொடர்ந்த மேற்பார்வையுடந்தான் உபயோகிக்கலாம்.

ஒரு நல்ல உணவுமுறை வல்லுநர் இரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் கூட எந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடவேண்டும் என்பதை உங்களுக்குக் கூற முடியும். இதுதான் மிகச்சிறந்த முறையும் கூட. அவசர காலத்தில் உடனே கூட்ட ஒரு சில நாட்களுக்குச் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து மற்றும் அலுமினியம் உரிஞ்சப்படிவதற்கு வைட்டமின் சி யின் தேவையையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து மாத்திரைகள் குழந்தைகளுக்கு விஷம். ஆகையால் மாத்திரைகளை எங்காவது பூட்டி வைக்க வேண்டும்.

Monday, October 4, 2010

வர்த்தகம் மற்றும் தொழில்துறை செழிக்க இது சுங்கவரி நீக்கப்பட்ட இடமாக இருந்து இந்தியாவிற்கு அளவில்லா வளத்தைக் கொண்டு வர வேண்டும்.

ராமர் தீவு கீழக்கரையின் தெற்குப் பக்கத்தில் ஆரம்பித்து தேவிப்பட்டிணம் தாண்டி கடலில் சேர வேண்டும். இது ஒரு நேரான கால்வாயாக இருப்பதால் பலவித அனுகூலங்கள் இருக்கின்றன. கட்டுவது, பாதுகாப்பது, பராமரிப்பது எளிதானது. கப்பல் பிரயாணத்திற்கும் சிறந்தது. சிங்கப்பூரோடு இணைத்துப் பார்க்கும் பொழுது ராமர் தீவுக்கு இந்தக் கால்வாயின் இரு பக்கங்களிலும் வசதியிருக்கிறது. கால்வாய்க்கு மறு பக்கத்திலிருக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் ராமர் தீவுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் உண்டாக்கலாம், ஒழுங்கு படுத்தலாம். இதனால் இந்தத் தீவு எந்த விதப் பிரச்சினையும் இல்லாத நமது உலகின் நந்தவனமாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தான் ராமன்.

இங்குள்ள இயற்கை வளங்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் உண்டாக்கக்கூடாது. இங்குள்ள பூமி மட்டுமில்லாமல் கடலிலுள்ள செடி, கொடி மற்றும் மரங்களிலிருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாக்கப்பட்டு வருங்காலத்திலும் இப்பொழுதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும். தனித்தன்மை வாய்ந்த இங்கு இருக்கும் இயற்கையான இடங்கள், கடல் இதனால் எப்பொழுதும் பாதுக்கக்கப்படும் என்று எண்ணினான் ராமன்.

குயின்மேரி-2 மற்றும் வேறு உல்லாசக் கப்பல்களிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகள் அவன் கண்கள் முன்பு வந்தார்கள். அங்கிருந்து அவர்கள் மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கன்னி, நாகூர் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ்களில் இடங்களைப் பார்க்கப் போகிறார்கள். இதனால் தெற்குத் தமிழ்நாட்டில் மற்றும் கேரளாவில் அதிக வேலை வாய்ப்புகள் உண்டாக வழி உண்டாகிறது. இதன் நல்ல விளைவுகள், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வேலை செய்ய வருவார்கள். நாட்டின் ஒற்றுமை கூடும். மேலும் சென்னையின் மக்கள், தொழில் அடர்த்தியை மிதப்படுத்துவதற்கும் இது உதவும். ஆனால் இவற்றிற்கிடையில் ராமர் தீவு புனிதமான, திவ்யத்தன்மை வாய்ந்த இடமாக என்றும் நிற்கும்.

அதே நேரத்தில் இந்த ராமர் தீவு அன்புடன் நேசிக்கும் அனைவருக்கும் மிக அருகிலேயே இருக்கும் என்று எண்ணினான் ராமன். திட்டம் போட்டுக் கட்டப்பட்ட இந்தத் தீவில் பழமையையும் புதுமையையும் இணைக்கும் பொழுது அவை சமாதானமாகச் சேருவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியது அவன் மனம்.

பவளப் பாறைகள், பலவித நிறமான மீன்கள், நடனமாடும் டால்பின்கள் இந்த இடங்களில் எப்பொழுதும் இருக்க வழி உண்டாகும். இது உலகிலுள்ள உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கமாக மாறும். உயிரினங்களின் வளர்ச்சியைப் பற்றி முதன் முதலில் உண்டான ஒரு முதுகெலும்பு விலங்குடன் குருசடைத் தீவு உலகிலுள்ள எல்லா உயிரியல் மாணவர்களுக்கும் எப்பொழுதும் மெக்காவாக இருக்கும்.

நமது இந்தியக் கடற்கரை 7517 கி.மீ. நீளமானது. ஒவ்வொரு 50 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் இருக்கவேண்டும் என்று அவன் கனவு கண்டான். அதில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளுக்கும், டிராலர்களுக்கும், கடல் விளையாட்டிற்கும் மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கும் இடமிருக்கவேண்டும். ஆனால் அதில் பெரும்பகுதி பலவிதத்திலும் உபயோகப்படும் ஒரு நவீன வர்த்தகத் துறைமுகமாக இருக்கவேண்டும் என்பது ராமனின் கனவு. மூன்று அல்லது நான்கு மீனவர்களுக்குச் சேர்ந்து ஒரு விசைப் படகை கொடுக்கலாம். ஒவ்வொரு மீனவக் கிராமத்திற்கும் ஒரு ஆழ்கடல் மீன்பிடிப்புக் கப்பல் இருக்கவேண்டும்.

கடலில் காற்றிலிருந்து மின்சார உற்பத்திக்கான பெரிய காற்று விசிறிகளுக்குள்ள பூங்காக்கள், கடல் நீரைக் குடிதண்ணீராக மற்றும் தொழிற்சாலைகள் இவைகளெல்லாம் இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உயர்த்தும் என்று நம்பினான் ராமன். இந்தத் திட்டத்தினால் அனைவருமே வெற்றியடைவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியானது.

காலை மணி 7 ஆகிவிட்டது. கீதா எழுந்து தன்னைத் தயார் செய்துவிட்டாள். ஆனால் ராமன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். இல்லை, இன்னும் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனது அழகான ஆனால் மர்மமான சிரிப்பும் எப்பொழுதும் அவனது உதடுகளில் தெரிந்தது. கீதா அவளது தலையணையை எடுத்து, அவனது மூக்கு நுனியைத் தொட்டாள். அவன் கண்களைத் திறந்தான். அவனுக்கு முன் அழகான சிரித்த முகத்துடன் நின்ற கீதாவை அவன் பார்த்தான்.

"உங்கள் டிக்கட்டும் வந்துவிட்டது. முற்பகல் 11.30 மணிக்கு மதுரை விமானம் இங்கிருந்து புறப்படுகிறது", என்றால் கீதா.

அவன் அவளை நன்றாகப் பார்த்தான். "காலை வணக்கம் கீதா. காலை உணவிற்கு நீ மாத்திரம் போ. எனக்கு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியதிருக்கிறது", ராமன் கூறினான்.

இதுவரை அவளை நீங்கள் என்று அழைத்த ராமன் இக்கணம் அவளை நீ என்று சுருக்கியத்தை உணர்ந்தான். உடனே அவன் தொடர்ந்து மன்னிக்கவும் என்று சொல்லவும் கீதா சட்டென்று "நீங்கள் என்னை இப்படி உரிமையுடன் கூப்பிடுவதே எனக்குப் பிடித்திருக்கிறது", என்று கூறி அவனது குற்ற உணர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

"என்னைவிட அந்த வேலை முக்கியமா?" கீதா அவனைக் கேட்டாள்.

அவனும் ஆமாம் என்று தலையை அசைத்தான். அவளுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பதிலும் சொல்லாமல் அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

"அவள் நல்ல கொபத்திளிருக்கிறாள்", ராமன் நினைத்தான். "நாளைக்கு எல்லாவற்றையும் என்னால் அவளிடம் விளக்கமாகக் கூற முடியும்", என்று எண்ணி தனது மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.

காலை உணவு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கீதாவுக்கு ராமன் ஏன் ஆவலுடன் சேர்ந்து சாப்பிட விரும்பவில்லை என்பது புரியாத புதிராக இருந்தது. ஆண்களுக்கு எதிலாவது விருப்பம் இல்லாவிட்டால் அதை முக்கியமான வேலை இருப்பதாகக் கூறித் தட்டிக்கழித்து விடுகிறார்கள். இதற்கு ராமனும் விதிவிலக்கில்லை என்று எண்ணினாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Friday, October 1, 2010

இந்தத் தீவு எப்படியிருக்கும் என்று எண்ணினான். கீழக்கரையிலிருந்து தேவிப்பட்டிணம் வரை சென்ற கால்வாயினால் உண்டாகப் போகும் பெரிய தீவைப் பற்றி எண்ணினான். இந்த நல்ல பெரிய தீவிற்கு ராமர் தீவு என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமானது என்ற நினைத்தான். எந்தெந்த ஊர்கள் இந்தத் தீவில் இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். அதை பற்றி அறிய அவன் நினைத்து ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக அவனுக்கு அந்த இடங்கள் ஞ்யபகத்திற்கு வந்தன. கீழக்கரை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மண்டபம், இருமேனி, பானல்க்குளம் மற்றும் தேவிப்பட்டிணம்தான் இந்தத் தீவில் இருக்கும் முக்கியமான ஊர்கள்.

கழுத்திலிருக்கும் ஒரு தங்க ஆபரணத்தில் தொங்கும் டாலரில் உள்ள அழகான மினுமினுக்கும் வைரக்கர்களைப் போல் பக்கத்து தீவான ராமேஸ்வரமும், பாம்பனும் இந்த ராமர் தீவின் மற்ற நகரங்களாகும் என்று எண்ணினான் ராமன்.

ராமர் தீவு முழுமையாக அவன் மனதில் உருவாகிவிட்டது. இது வரப்போகும் வல்லரசான இந்தியாவிற்கு தங்க முட்டையிடும் வாத்தாக உருவாக்கப்படவேண்டும் என்று எண்ணினான் ராமன்.

இந்தியாவில் எத்தனையோ சிறந்த இன்ஜினீயர்கள் இருக்கிறார்கள். இவர்களால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பினான். தேவைப்பட்டால் வெளிநாட்டு நிபுணர்களையும் இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் எண்ணினான். இது மலைகள் இல்லாத இடத்தில் ஒரு கோடு மாதிரி நேராக வெட்டப்பட வேண்டிய கால்வாய். ஆகையால் அதிக பிரச்சினைகளில்லாமல் தோண்டலாம் என்று எண்ணினான் ராமன். அவனது கனவு தொடர்ந்து கொண்டேஇருந்தது. ராமர் தீவின் எல்லைகள் அவனது மனதில் உருவாக உருவாக அவை அதன் அளவையும் பெருமையையும் காட்டின. இது ஒரு சுங்கவரியில்லாத தீவாக இருக்க வேண்டும். பொருளாதாரம் இங்கு செழித்துக் கொழிக்க வேண்டும். போதிய அளவில் நல்ல குடி தண்ணீரும், மின்சாரமும் இருக்கவேண்டும். மேலும் மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களும், பல்கலைக்கலகங்களும் அங்கு உருவாகவேண்டும் என்று எண்ணினான். விளையாட்டும், இசையும் அங்கு குடிவர வேண்டுமென்றும் விரும்பினான் ராமன்.

இந்தப் பகுதியிலுள்ள ஊர்களில் பல கோவில்கள் இருப்பதாக அவன் படித்திருக்கிறான். இவைகள் இதனால் இன்னும் பலனடைந்து பிரபலமாகும். ராமர் தீவு தமிழ்நாடு முழுவதற்கும் பலவித முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது அவனது நிச்சயமான நம்பிக்கை. அங்கு உருவாகப்போகும் பிரம்மாண்டமான துறைமுகத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைந்தான் ராமன். அங்கு வரப்போகும் குயின்மேரி-2 போன்ற பெரிய கப்பல்களையும், அது போன்ற மற்றும் பல உல்லாசக் கப்பல்களில் அந்தத்தீவிற்கு வந்து ரசிக்கப்போகும் ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகளைப் பற்றியும் அவன் மனம் அசை போட்டது. அதைப் பற்றிய நினைவுகளில் அவன் தன இனிமையான கனவில் ஆழ்ந்தான்.

தேவையான அளவு கடல் தண்ணீரைக் குடிதண்ணீராக மாற்றலாம் என்று எண்ணினான். துறைமுகத்தின் ஒரு கடைசியில் மீனவர்கள் இதை உபயோகிப்பார்கள். மறுகடைசியில் எல்லாவித நீர்விளையாட்டுகளுக்கான படகுகள், உல்லாசக்கப்பல்கள் வர வசதி இருக்கும். மொனாக்கோ அல்லது ப்ளோரிடாவிலுள்ளது போல ராமர் தீவும் உலகத்தில் உள்ள முக்கியமான இடமாக வரும். இங்கு பெருமளவில் வர்த்தகமும் நடக்கும். இங்கு காட்டப்படும் கட்டடங்கள் மிக உயரமாக இருக்கக்கூடாது. 5 மாடிகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்று நினைத்தான். தீவின் ஒரு ஓரத்தில் 700 மீட்டர் உயரத்தில் ஒரு செயற்கை மலையை உண்டாக்க வேண்டும். தீவு முழுவதும் பலவித மரங்களை எங்கும் நடவேண்டும். அது ஒரு நீலனிரக்கடளுக்கு நடுவில் இருக்கும் ஒரு பசுமையான தீவாக வேண்டும் என்று எண்ணினான் ராமன்.

ராமர் தீவில் உருவாக்கப்படும் மியூசியம்கள், பொருட்காட்சிகள் கடலுக்கு கீழேயுள்ள பூங்காக்கள் மற்றும் இசை அரங்கங்கள் எல்லாமே உலகிலேயே மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும். நிபுணர்கள் இதைப்பற்றி என்னைவிட மிகநல்ல முறையில் திட்டம் போட்டு நிறைவேற்றமுடியும் என்று நம்பினான். விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரத்தின் உச்சநிலை அங்கு நிலவவேண்டும். அங்கு வாழும், வரும் மக்கள் தங்களுடைய தினசரி பிரச்சினைகளான ஜாதி, மதம் மற்றும் இனத்தைப் பற்றி மறந்துவிட்டு அமைதியாக, இன்பமாக இணைந்து வாழவேண்டும். எல்லோரும் அவர்கள் விரும்பியபடியே கடவுளைக் கும்பிடலாம்.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அவர்களுடைய திருவிழாக்களை, பண்டிகைகளை அவர்கள் விரும்புவது போல கொண்டாடலாம். மனிதர்களுக்கு மதம், தனிப்பட்ட குடும்பம் மற்றும் சமுதாயத்தோடு இணைந்து போவதாக இருக்க வேண்டும். எல்லா மதங்களும் வழங்கும் அளவில்லா அன்பு நமது மதப்புத்தகங்களில் இல்லாமல், மனிதர்களின் மனதிலும் பதிக்கப்பட்டு இங்கு நடைமுறையிலும் செயல்பட வேண்டும். கீழக்கரையில் உள்ள இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி நல்ல முறையில் தமிழ்நாடு முழுவதுமே அறியும். இங்கு தேவாலயங்களுக்கும் தகுந்த இடங்கள் உள்ளன.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Thursday, September 30, 2010

எல்லாச் செய்திகளையும் வாசிப்பது ராமனின் வழக்கம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல அரசியல் வித்தைகளையும் அவன் ஆழ்ந்து படித்திருக்கிறான். இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்பது அவனது விருப்பம். மேலும் இந்தியன் என்ற முறையில் ராமர் பாலத்தை அளிப்பதையும் அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் ஒரு நல்ல சமரசத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இதனால் மிக நல்ல விளைவுகள் ஏற்படும் என்றே கருதினான். ராமர் பாலத்தை ஒட்டி ஒரு சிறு கால்வாய் வெட்டுவதை ராமன் ஒரு வேடிக்கை என்றே கருதினான். இதற்கு எடுக்கப்படும் முடிவு நல்லததாகவும், மிகச் சிறந்ததாகவும், உலகில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினான். பலவித மக்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் சிங்கப்பூரைப் பற்றி எண்ணினான். "நான் அதற்கான பதிலைக் கண்டுபிடித்து விட்டேன்", என்று உரக்கக் கூறினான். அவனது மூளை பயங்கர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த 5 நாட்கள் சிங்கப்பூரில் நடந்தவையெல்லாம் அவன் கண்கள் முன்னாள் படம் போல ஓடின. அங்கிருந்த பல மிகச் சிறந்த காரியங்கள் சுத்தம், ஒழுங்கு, பல கலாச்சாரத்தினர், மதத்தினரும் இணைந்து வாழ்தல் மற்றும் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்ட எல்லாத் திட்டங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

"ஒரு புதிய சிங்கப்பூர், இருப்பதை விட மேலான, உயர்ந்த சிங்கப்பூர் இங்கு உருவாக்கப்படுவதுதான் சிறந்த பதில்", எண்ணினான் ராமன். இது முன்னேறி வரும் இந்தியாவிற்கு நல்லது. மேலும் இது கீதாவுக்கும் நல்லது. ஏனெனில் இதை நிறைவேற்றி கீதாவிற்கு அர்ப்பணித்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இந்த இந்தியச் சிங்கப்பூரைப் பற்றி பேசும், வாசிக்கும் பொழுதும் கீதாவைப் பற்றியும் நினைப்பார்கள் என்று எண்ணினான்.

"ஏன் இந்தியச் சிங்கப்பூர் என்று அழைக்கவேண்டும். நான் இதற்கு வேறு ஒரு புதுப்பெயரைச் சூட்ட விரும்புகிறேன். இதை ராமர் தீவு என்றே அழைக்கவேண்டும். ஆமாம், இந்த ராமர் தீவு, ராமர் பாலம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் ஒரேயடியாகத் தீர்த்துவிடும். அதே நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா வல்லரசாகவும் இதுவும் ஒரு பங்கு வகிக்கும். இதை சிங்கப்பூருடனும் அல்லது ஹாங்காங்குடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவில் ராமேஸ்வரத்திற்குப் பக்கத்திலிருப்பதால் இது தனிச் சிறப்பையும் பெற முடியும்", ராமன் எண்ணினான். அவன் இந்த இடங்களுக்கு இன்னும் போனதில்லை. ஆனால் அவனுக்குத் தமிழ்நாட்டின் பூகோள சாஸ்திரத்தைப் பற்றி நல்ல அறிவு இருந்தது. "கீதாவிற்கு இது எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஏனெனில் அவள் அதைப் பார்க்க முடியும், ரசிக்க முடியும்", என்றும் எண்ணினான் ராமன்.

கீதா திடீரென்று எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் எங்கிருக்கிறாள் என்பது சிறிது நேரம் அவளுக்குப் புரியவில்லை. பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த ராமனைப் பார்த்தாள். அவனது உதடுகளில் புன்முறுவலைக் கண்டாள். அவன் ஏதோ முனுமுனுப்பதைப் போல இருந்தது. அவளது காத்து அவனது உதடுகளை நெருங்கியது. அவனது உதடுகளிலிருந்து இன்பகரமான ஆச்சரியத்துடன் கீதாவின் பெயரைத்தான் ராமன் சொல்லிக்கொண்டிருப்பதை அவள் கேட்டால். அவனது முகத்தில் ஓடிய வசீகரமான, மகிழ்ச்சியுடன் கலந்த உணர்ச்சிகளையும் அவனது கவர்ச்சியான புன்னகையையும் அவள் மூன்று மணி நேரங்களுக்கு மேல் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள பப்பா,

நான் அவரை மிக அதிகமாகக் காதலிக்கிறேன். உங்களிடம்தான் இதை முதன்முதலாகத் தெரிவிக்கிறேன். அம்மாவிடமும் சொல்லிவிடுங்கள்.

உங்களிருவருக்கும் எனது அன்பைத் தெரிவிக்கிறேன்...

கீதா.

இன்னும் இரண்டு மணி நேரம் வேகமாக ஓடியது. அவள் ராமனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனது மனதில் என்னதான் அவ்வளவு முக்கியமானது ஓடுகிறது என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

ராமன் கீழக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்தைப் பற்றி உடனே எண்ணினான். கீழக்கரைக்குக் கீழே மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்து தேவிப்பட்டிணம் தாண்டி மூன்று கிலோமீட்டர் வரை ஒரு கால்வாய் வெட்ட விரும்பினான்.

ராமனுக்கு இப்பொழுது ராமர் தீவு உருவாகிவிட்டது, பிறந்துவிட்டது.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Wednesday, September 29, 2010

"நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் சென்னையில் தனியாகத் தங்க வேண்டியிருக்கிறது. நாம் நல்ல நண்பர்கள். நான் உங்களை என்னுடன் தங்குமாறு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் என்னை மதுரையில் எனது பாட்டியிடம் கொண்டு விட்டீர்கள் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்", என்றாள் கீதா அன்பாக.

இதுதான் ராமனின் வாழ்வில் அவன் முதன்முதலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நாள். அவன் கீதாவைப் பார்த்து அழகாகச் சிரித்தான். எனக்கு இந்த சுவாரசியமான வேலையைச் செய்ய எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறி அவளுக்குச் சம்மதமளித்தான் ராமன். ராமனின் இரண்டு கரங்களையும் தனது கைகளில் எடுத்துக்கொண்டு மெதுவாக அழுத்தி அவள் அவனுக்கு நன்றி சொன்னாள். விமானம் சென்னையில் இறங்கி விட்டது. அவர்களுக்கிடையில் நடந்த இந்த சூடான விவாதத்தில் இருவருமே அதைக் கவனிக்கவில்லை.

கீதாவும் ராமனும் டாக்சியில் சென்று ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்தார்கள். அவள் தனது மனைவி என்று எழுதியதை அவள் அரைக் கண்ணால் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவர்கள் அறைக்குச் சென்றார்கள். அது ஒரு பெரிய அறை. அதில் தற்காலத்திலுள்ள எல்லா வசதிகளும் இருந்தன. ஆண், பெண்களுக்கான எல்லாத் தேவைகளையும் அளவுக்கதிகமாகவே எண்ணத்தில் கொண்டு வசதிகளைச் செய்திருந்தார்கள். கீதா மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவள் குளியலறைக்குச் சென்றாள். ராமன் சோபாவில் அமர்ந்தான். கண்களை மூடினான். விமானத்தில் அவளுக்கும் அவனுக்குமிடையில் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை வார்த்தைக்கு வார்த்தை திரும்பவும் அசைபோட ஆரம்பித்தான். கீதா சொன்னது சரியே என்று அவனுக்குப்பட்டது. சிறப்பான முறையில் அவளுக்குச் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்தான். மேலும் அந்தச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் மேற்கொள்ளப்படாத ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக, சிறந்த செயலாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவளுக்குத் தான் காதலின் பெயரால் இந்த விதமாக ஒரு சிறந்த செயலைச் செய்ய முடியுமா என்று எண்ணியபோது அவனது மனதில் சஞ்சலமும் பயமும் உண்டானது.

கீதாவும் ராமனும் மெரீனா கடற்கரையில் உலாவினார்கள். கபாலீஸ்வரர் கோவிலில் இறைவனைத் தரிசித்தார்கள். இறுதியில் ராமனுடைய வீட்டிருகுச் சென்று அவனது பெற்றோரைச் சந்தித்தனர்.

"நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ சிங்கப்பூரில் இருந்து வருவதில் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்", கேட்டார் ராமனின் தந்தை.

"இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலையை இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்", என்று குறும்புப் புன்முறுவலுடன் கீதாவைச் சுட்டிக்காட்டினான்.

அவனது அம்மா திறந்த வாயை மூடாமல் கீதாவைப் பார்த்து, "வாம்மா", என்று கூறினாள்.

"இந்த அழகான பெண் உனக்கு எங்கிருந்து கிடைத்தால்?" கேட்டார் அப்பா.

"ஆயா வேலையை மிகவும் நல்ல வேலை என்று இப்பொழுதுதான் நன்றாக உணருகிறேன்", என்றார் அவர் புன்முறுவலுடன்.

"இன்று நாங்கள் ஹோட்டலில் தங்குகிறோம். நாளை காலை விமானத்தில் சென்று அவளைப் பத்திரமாக அவளது பாட்டியிடம் மதுரையில் ஒப்படைத்தபிறகு நான் சென்னை திரும்புவேன். அதன் பிறகு விளக்கமாக எல்லாவற்றையும் சொல்கிறேன் அப்பா", என்றான் ராமன்.

மெதுவாக அவனது தந்தை சரி என்று தலையை ஆட்டினார். ஆனால் அம்மா சத்தமாக சொன்னாள், "ஏன் நீங்கள் இருவரும் நமது வீட்டில் தங்கக்கூடாது? நமது வீட்டில் விருந்தினருக்காக ஒரு அறை இருப்பது உனக்குத் தெரியுமே".

"உனது மகனைப் பற்றி உனக்குத்தான் மற்ற எல்லோரையும் விட நன்றாகத் தெரியும். முடிவு எடுக்கப்பட்டு விட்டது. விமான டிக்கட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. நான் திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன் அம்மா", என்று சிரித்தபடியே பதிலளித்தான் ராமன்.

தயக்கத்துடன் அவனது அம்மாவும் சரி என்று கூறினாள்.

"நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு போகலாமே", என்றாள் அம்மா.

"நேரம் வரும்பொழுது நீங்கள் எங்களுக்குத் தினமும் சமையல் செய்யலாம்", என்றான் ராமன்.

இதைச் சொல்லும் பொழுது அவனையுமறியாமல் சிரித்துவிட்டான். வேறு வழியில்லாததால் அவனது அம்மாவும் தலையை அசைத்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.

"உனது மாமாவுக்குப் போன் பண்ணினாயா?" அப்பா கேட்டார்.

"இன்னும் பண்ணவில்லை, கட்டாயம் இன்று நான் போன் பண்ணுவேன்", பதிலளித்தான் ராமன்.

கீதாவும் ராமனும் ஹோட்டலை அடைந்தவுடன் சாப்பிட்டார்கள். அவன் தனது மாமாவுக்கும் அவள் தன் பெற்றோர்களுக்கும் போன் செய்தார்கள்.

"இப்பொழுது நான் எனது இரவு உடையை மாற்றிக்கொண்டு தூங்கப்போகிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?" கேட்டாள் கீதா.

"இல்லை, நீங்கள் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள்", என்று பதிலளித்துவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே சென்னையின் இரவு அழகைப் பார்த்து ரசித்தான் ராமன்.

அவன் திரும்பிப் பார்த்த பொழுது கட்டிலில் கீதா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் சிறிது வளைந்த, அழகான கொடி போன்ற உடலுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனும் படுக்கையில் மறுபக்கத்தில் படுத்தான். தூங்கும் முன் திரும்பவும் அவன் மிகவும் ஆழ்ந்து கீதாவுடன் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை எண்ணினான் ராமன். முதல்முறையாகத் தன் வாழ்க்கையை வெறுத்தான் ராமன். இதே எண்ணங்களுடன் அயர்ந்து உறங்கிவிட்டான். அப்பொழுது அவன் ஒரு கனவு கண்டான். அது அவனுக்கும் கீதாவுக்கும் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே சிறந்தது என்று எண்ணினான். இந்த சிறந்த கனவை நனவாக்கி கீதாவிற்குச் சமர்ப்பிக்க விரும்பினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, September 28, 2010

மறுநாள் காலை 7.5 மணிக்கு ராமன் எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தயாராகிவிட்டான். 10 மணிக்கு அவனது விமானம் சென்னையில். அதன் பிறகு 4 மணி நேரத்தில் இருப்பேன் என்று எண்ணினான். ஒரு டாக்சியில் ஏறி விமான நிலையத்தை அடைந்தான். கீதா பக்கத்தில் இல்லாதது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தனது வாழ்வில் கடந்த 4 நாட்கள்தான் மிகவும் சிறந்தது என்று நினைத்தான். அவனிடம் அவளுடைய மெயில் விலாசம், செல்போன் நம்பர் இருந்தாலும் நல்ல நாட்களெல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணினான். பெட்டியைக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தின் உள் பகுதியை அடைந்த உடனேயே அவனது கண்களுக்கு எங்குமே கீதாவகத்தான் தெரிந்தது. அவனுடைய இடம் விமானத்தின் நடுவில் இருந்தது. இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான் ராமன்.

ராமன் திரும்பவும் கண்களைத் திறந்த பொழுது அவன் மேகத்திற்கு மேல் இருந்தான். சிரித்த முகத்துடன் அவனிடம் வந்த விமானப் பணிப்பெண் ஒரு துண்டுக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். அதை பிரித்துப் பார்த்தான் ராமன். அதில் நான்கே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. "நானிருக்கும் இடத்திற்கு வாருங்கள், கீதா". புன்னகையுடன் அவனைப் பத்தாவது வரிசைக்கு செல்லுமாறு அந்த விமானப் பணிப்பெண் கூறினால். ஒரே ஓட்டத்தில் அவன் 10வது வரிசையை அடைந்தான். எப்பொழுதும் போல் அழகான நீல நிறச் சேலையில் அங்கு அமர்ந்திருந்தாள் கீதா. அவன் அவள் அருகில் உட்கார்ந்தான். அவளது கையை தனது கையில் எடுத்துக் கொண்டு தான் இப்பொழுதுதான் அதிக சந்தோசமாக இருப்பதாகக் கூறினான்.

"உங்களைவிடச் சந்தோசமாக இருக்கும் இன்னொருவரை எனக்குத் தெரியும்", என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுது அவளது ஆள் காட்டி விரல் அவளையே சுட்டிக்காட்டியது.

"நான் உங்களுடன் பிரயாணம் செய்ய விரும்பினேன். எனது அன்பு பப்பா எனது விமானச் சீட்டை மாற்றிக் கொடுத்தார்", பெருமையுடன் சொன்னால் கீதா. "இன்னும் ௪ மணி நேரம் நமக்கு இருப்பதால் நாம் எல்லாவற்றைப் பற்றியும் பேசலாமே", அவனை ஈர்க்கும் கவர்ச்சியான சிரிப்புடன் கூறினால் அவள். அவள் கையிலிருந்து தனது கையை இழுத்துக் கொண்டான் ராமன். அவள் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டே இருந்தாள்.

"தாஜ்மஹாலை உங்களுக்குப் பிடிக்குமா?" திடீரென்று கேட்டாள் கீதா.

"ஆமாம், அது உலகத்திலுள்ள அதிசயங்களில் ஒன்று. மேலும் புனிதமான காதலின் சின்னமும் கூட", ராமன் பதிலளித்தான்.

"நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஷாஜகான், மும்தாஜ் உயிரோடு இருந்த பொழுதே ஏதாவது நல்லது செய்திருக்கலாம். இந்த அன்பின், காதலின் சின்னத்தை அவள் பார்க்கவேயில்லையே. நான் உயிரோடு இருந்த பொழுதே எனது கணவனிடமிருந்து மிக நல்லதை எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால் இந்த சிறந்த பரிசின் பெருமை எனக்கு எப்படித் தெரியும்", என்றாள் கீதா புன்னகையுடன்.

"இது ஒரு மிகச் சிறந்த எண்ணம். நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்", என்றான் அவன் ஒரு மர்மமான புன்னகையுடன். அவளுடைய பெரிய அழகான கண்களால் அவள் அவனை நோக்கினாள்.

"நிச்சயம்?" கீதா கேட்டாள்.

"100% நிச்சயம். அதிசயங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கின்றன. ஏன் உங்களுக்கு யோகம் இருக்கக்கூடாது", என்றான் அவன் எந்தவித உணர்ச்சியுமில்லாத குரலில். அவள் கண்களை மூடிக்கொண்டு அவன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

"சென்னையில் எங்கு தங்கப் போகிறீர்கள்? எங்களுடைய வீட்டிற்கு வந்து தங்குங்களேன் . மதுரைக்கு விமானம் நாளைக்குத்தானே போகிறது?" கேட்டான் ராமன்.

"நான் உங்கள் வீட்டில் இன்று தங்கப் போவது இல்லை. உங்கள் வீட்டிற்கு வந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் பிறகு எங்காவது ஒரு நல்ல ஹோட்டலில் நாமிருவருமே தங்கலாம்", மிக உறுதியுடன் கூறினாள் கீதா.

"என்ன சொல்கிறீர்கள்?" அவனது குரல் சற்று உயர்ந்தது.

"நீங்கள்தானே கூறினீர்கள் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று. ஒரு கட்டிலில் கூட எந்தவிதமான கேட்ட எண்ணமுமில்லாமல் அடுத்தவருக்குப் பிரச்சினையில்லாமல் படுத்துத் தூங்கலாம் என்று", அமைதியாகக் கூறினாள் கீதா.

"இது லண்டனுமில்லை, பாரீசுமில்லை, இது சென்னை. இங்கு சமுதாயத்தின் கட்டுப்பாடுகளின் படிதான் நடக்க வேண்டும். எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை, ஆனால் உங்களின் பெயரைக் கெடுக்க நான் விரும்பவில்லை", என்றான் ராமன்.

தனது தலையைப் பலமாக அசைத்துக் கொண்டு, "ஆகா, நீங்கள் ஆண்கள், மிகவும் வீரம் பேசுவீர்கள். ஆனால் உண்மையைச் சந்திக்க நேரும் பொழுது கோழைகளைப் போல் பின்வாங்குவீர்கள்", கேலியான புன்னகையுடன் சூடாக வந்தது அவள் பதில்.

அரை மணி நேரத்திற்கு மேல் இதைப் பற்றி அவர்கள் விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். திடீரென்று தலைமை விமானப் பணிபென்னின் குரல் கணீரென்று ஒலித்தது, "இன்னும் 30 நிமிடங்களில் விமானம் சென்னையை அடையும்", என்று அறிவித்தாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, September 7, 2010

"இந்தக் கேள்வியை என்னிடம் 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் இதற்குச் சரியான பதிலை நான் கூறமுடியும்", என்றான் ராமன் ஒரு சிறு சிரிப்புடன்.

"நீங்கள் பேச்சின் சுவாரசியத்தையே கெடுத்துவிட்டீர்கள். மேலும் மற்றவர்களுடன் இவற்றைப் பற்றி பேசும் பொழுதுதான் புதிய எண்ணங்கள் உருவாகும். சொல்லுங்கள், நாம் அதைப் பற்றிப் பேசுவோம்", என்றாள் கீதா.

"பேசுவோம், ஆனால் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்ற பிறகுதான் கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்ற விஷயத்தைப் பற்றி முடிவெடுக்க நான் விரும்புகிறேன்", என்றான் அவன்.

"நீங்கள் ஒரு பெண்ணைக் காதலித்தால் என்ன செய்வீர்கள்?", என்றால் அவள் தனது குறும்பான கண்களுடன்.

"நான் அவளை அன்புடன் சில வருடங்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்வேன். அதற்குச் சம்மதிப்பதோ அல்லது மறுப்பதோ அவளுடைய முடிவு. அவளுக்காகச் சில வருடங்கள் காத்திருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை", என்று பதிலளித்தான் ராமன்.

ஐந்து நிமிடப் பழக்கத்திற்குப் பிறகு பாலியல் உறவைப் பற்றித் தன்னுடன் பேச விரும்பிய பல இளைஞர்களைப் பற்றி அவள் நினைத்தாள். இவன் மற்றவர்களை விட மிகவும் வேறுபட்டவன். இதுதான் என்னைக் காந்தம் போல் அவனிடம் ஈர்க்கிறது. அவனைப் பற்றிய எனது எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியவில்லை. இந்த சிந்தனையுடன் அவள் மௌனமாகி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மறந்துவிட்டால். ராமன் அவளை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஹாலில் காத்துக் கொண்டிருக்கும் அவளது பெற்றோரிடம் போவோம் என்று அவன் கூற, மெதுவாக இருவரும் அவளது அறையிலிருந்து கிளம்பினார்கள்.

அருணாச்சலம் அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். ஆனால் இன்று அவர்களிடமிருந்து மிகக் குறுகிய பதில்களே அவருக்கு கிடைத்தன. தனது மகளின் கையில் அவர் ஒரு கவரைக் கொடுத்தார். அதை அவள் மெதுவாகத் திறந்து பார்த்தாள். அவள் முகத்தில் பளிச்சென்று உண்டான சந்தோசத்தை அவனால் நன்கு பார்க்க முடிந்தது.

"பப்பா மிகவும் நன்றி", என்று கூறி அருணாச்சலத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். "அம்மா, நாம் இப்பொழுது சாப்பிடுவோம். அதன் பிறகு ராமன் அவரது ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கட்டும். நாளை ஒரு மிகவும் கடினமான நாளாக இருக்கும்", என்றாள் கீதா தனது கண்களைச் சிமிட்டிக் கொண்டே. அவளது குரலும் மிக்க மகிழ்ச்சியாக ஒலித்தது. அவன் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாள் அருணாச்சலம் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தார். ஆனால் அதை நாளைக் காலையில்தான் திறந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான் ராமன். இப்பொழுதுதான் நான் முன்பிருந்த ராமனே இல்லை என்று நினைத்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் மேலோட்டமாக சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பார்த்தார்கள். அதிக கவனம் செலுத்தாதற்குக் காரணம் அவர்கள் இருவருமே அவர்களுடைய எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் மூல்கியிருந்ததுதான்.

"உங்களுக்கு அப்பா கொடுத்த கவரில் என்ன இருந்தது?", கீதா கேட்டாள்.

"தொங்கும் கேபின் காரில் வைத்துச் சாப்பிட இரண்டு டிக்கெட்கள் எனது கவரில் இருந்தன", என்றான் அவன் சிரித்த முகத்துடன்.

"உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்", முணுமுணுத்தாள் கீதா.

"உங்கள் கவரில் என்ன இருந்தது?", ராமன் கேட்டான். ஆனால் அவனது கேள்விக்கு அவள் பதிலளிக்கவில்லை. அது தனது ரகசியம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

ராமன் தனக்குக் கிடைத்த கேபின் கார் விருந்தைப் பற்றி மேலும் விவரித்தான்.

"இந்த விருந்து கடலுக்கு 110 மீட்டருக்கு மேல் கேபின் காரில் நடக்கும். ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் உட்கார முடியும்", என்றான் அவன்.

"யார் கண்டார்கள்? நமது கேபினில் இரண்டு மகா வயதானவர்களும் வரலாம்", என்றாள் கீதா நக்கலாக.

ராமனுக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இந்தச் சனிக்கிழமை அவன் கீதாவுடன் விருந்துண்பான், அவளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கிவிடுவான், அவளிடமும் அவளது பெற்றோர்களிடமும் விடை பெற்றுக்கொள்வான் என்று எண்ணினான். அவன் அவளிடம் நிறையச் சொல்ல விரும்பினான். அதற்கான சரியான வார்த்தைகள் அவனுக்கு உதிக்கவில்லை.

இளம் ஜோடிகளுக்கு அன்பான, ஆசையான அந்த உணவு மிகப்பிரமாதமாக இருந்தது. அவர்கள் அந்த ருசியான உணவையும், அவர்களுக்கு கீழே மற்றும் சுற்றிலும் இருந்த அருமையான காட்சிகளைக் கண்டுகளித்தனர். இது அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. அவர்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். அவளை அவன் நேராகப் பார்க்கும் பொழுது அவள் கண்களிலிருந்த அளவில்லா அன்பை அவனால் உணரமுடிந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் கீதா காலியாக இருந்த இடங்களைச் சுட்டிக்காட்டி ஏன் ஒருவரும் இந்த இடங்களுக்கு வரவில்லை என்று சர்வரிடம் கேட்டாள். அவன் தனது தாளைப் பார்த்து விட்டு அதை எடுத்திருந்து அருணாச்சலம் குடும்பம் வரவில்லை என்று தெரிவித்தான். இந்த இன்பமான மாலை நேரத்திற்காக தனது தந்தைக்கு மனதிற்குள் கீதா நன்றியைத் தெரிவித்தாள்.

ராமன் கீதாவை அவள் வீட்டில் இறக்குவிட்டான். அவளது தந்தையோடு தேநீரையும் குடித்தான். மிக மகிழ்ச்சியான கேபின் கார் விருந்திற்குக் கீதாவுடன் வழி செய்ததற்காக அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆனால் அருணாச்சலத்தின் முகத்திலிருந்து அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவனால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இரவு 10 மணிக்கு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தனது அறைக்குத் திரும்பினான் ராமன். தனது அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு முக்கியமான எதையோ இழந்துவிட்டேன் என்று எண்ணினான். கீதா இல்லையே என்று கஷ்டப்படுகிறேனா? அவன் தன்னைத்தானே எரிச்சலுடன் கேட்டுக்கொண்டான்.

"நிச்சயமாக வருத்தப்படுகிறாய்", என்பதுதான் அவனது மனதிடம் இருந்து வந்த பதில். அவனது உணர்ச்சிகள் குழம்பிக்கிடந்தன. கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு எந்தவிதமான முடிவையும் கொடுக்கவில்லை. அவன் சஞ்சலம் அடைந்ததுதான் மிச்சம். பிறகு குளித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Thursday, September 2, 2010

கீதாவும் ராமனும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த சைனா டவுனைக் காரிலேயே சுற்றினார்கள். இந்தத் தனித்தன்மை வாய்ந்த இடத்தைப் பார்த்து அவர்களது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் எதைப் பார்க்கலாம் என்று திட்டம் தீட்ட விரும்பினார்கள். அவர்கள் உணவை அனுபவித்துச் சாப்பிட்டார்கள். ஆனால் அதைவிட அவர்களின் உரையாடல் அவர்களுக்கு அதிக இன்பத்தையளித்தது. அவள் அவனைப் பற்றி எல்லாவற்றையும் அறிய விரும்பினாள். அவளது எல்லா கேள்விகளுக்கும் அவன் பொறுமையாக பதில் கூறினான். சில வேலைகளில் அவளது கேள்விகள் குழந்தைத்தனமாக இருந்தன. ஆனால் பல கேள்விகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்ததையும் மகிழ்ச்சியோடு ரசித்தான்.

அவளிடம் இந்தியர்களின் கூர்மையான அறிவும், ஆழமமான கலாச்சாரமும் குடியிருப்பதாக எண்ணினான். அவன் எழுந்து போக விரும்பியபோது அவள் தனது சந்தோசமான மின்னும் கண்களுடன் கேட்டாள் "ஏன் நாம் இன்னும் உட்கார்ந்து பேச்சைத் தொடரக் கூடாது?".

"நாம் பேசிக்கொண்டேயிருந்தால் உங்களால் எனக்குச் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டவே முடியாது. இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு அவர்கள் நான் இங்கு பார்த்ததைப் பற்றிக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?", அவன் அவளைக் கேட்டான்.

"எனது பெற்றோர்கள் இங்கிருக்கிறார்கள். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்", என்பதே அவளது குறும்பான பதில்.

"எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?", அவள் கேட்டாள்.

"நீங்கள்தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத்தான் இங்கு எல்லாம் தெரியும்", சாந்தமாக அவன் பதில் கூறினான்.

"பிரச்சினையே இல்லை", என்று கூறிய கீதா கடகடவென்று சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

"ஆர்மி மியூசியம், செஸ் ஹோ கப்பல் பயணம், கிலோசோ கோட்டை, குதிரைப் பந்தய மைதானம், லாபிரடோர் ரகசியச் சுரங்கம், மலேய் கிராமம், விளையாட்டுச் சாமான்களுக்கான மினட் மியூசியம், ஆர்சிட் தோட்டங்கள், சிவப்புப் புள்ளி நாகரீக மியூசியம், பலவிதமான சிங்கப்பூரிலுள்ள உல்லாசப் பயணங்கள், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா, பறவைப் பூங்கா, மினி கோல்ப், இரவு சுற்றுப் பயணம், டைகர் டவர், சிங்கப்பூரின் கடலடி பொட்டானிகல் கார்டன், செங்கி மியூசியம், பல்கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்", என்று அவள் அடுக்கிக்கொண்டே போனால்.

எல்லாவற்றையும் ஒழுங்காக பார்க்க வேண்டுமானால் ஒரு மாதம் இங்கு இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

"இரண்டு நாட்களில் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? காரில் நாம் சிங்கப்பூர் முழுவதும் சுற்றுவோம். ஆனால் எங்காவது உட்கார்ந்து நிறையப் பேசுவோம்", என்றாள் கீதா.

அவளது சந்தோசமான கண்கள் நிறையச் செய்திகளைக் கூறுவதாக அவன் எண்ணினான். ஆனால் அவை கூறுவது அவனுக்கு விளங்காததால், புதிராகவே இருந்தது. அவளைச் சந்தித்து இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளே எல்லா முடிவுகளையும் எடுக்கத் தொடங்கி விட்டால் என்று என்னும்பொழுது அவனையுமறியாமலேயே புன்னகையும் வந்தது.

"இதோ பாருங்கள், என்ன வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இங்கு இருக்கும் இரண்டு நாட்களையும் உங்களுக்குப் பரிசளிக்கிறேன்", என்றான் ராமன் ஒரு தாராளப் புன்னகையுடன்.

"உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. எந்தவிதாமான நிபந்தனையும் இல்லாமல் வாக்குக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது", என்று சொன்ன கீதாவின் கண்கள் அவனைப் பயப்படுத்தும் நோக்கத்தோடு இருப்பதைப் போலக்காட்டின.

"இந்த அபாயத்தைத் தெரிந்துதான் நான் அப்படிச் சொன்னேன்", என்று தனது வழக்கமான, கவர்ச்சியான புன்முறுவலுடன் அவளுக்குப் பதிலளித்தான்.

அவன் அவளை விரும்புகிறான் என்ற உணர்ச்சியனால் அவள் மிக மகிழ்ச்சியாக இருந்தாள். காரில் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

என்னுடைய அறைக்குப் போய் எல்லாவற்றையும் பேசலாம். மறந்து விடாதீர்கள், நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும், என்றாள் கீதா பளிச்சென்று.

ஒரு குழந்தையைப் போல் சந்தோசத்தில் மின்னும் அவளுடைய கண்களைக் கவனித்தான். அவன் பதிலளிக்காமல் அவளைப் பின்தொடர்ந்தான். அவளது அரை எல்லா விதத்திலும் முழுமையாக இருந்தது. அங்கு ஒரு இளம்பெண் கனவு காணக்கூடிய, மனதிற்கும் உடம்பிற்கும் மகிழ்ச்சியைத் தரும் எல்லாம் இருந்தன.

"சில நாட்களில் இங்கிருந்து போகப் போகிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் அறையைப் பார்த்தபின் எனக்கு நீங்கள் இங்கு பெரிய மரம் போல ஆழமாக உங்கள் வேர்களைப் பதிப்பது போல் தெரிகிறது", என்றான் ராமன்.

"இது எனது தந்தையின் விருப்பம். நான்தான் எப்பொழுதும் இங்கு வரமுடியும் என்று உங்களிடம் முன்பே கூறிவிட்டேனே", என்று பதிலளித்தாள் கீதா.

"இப்பொழுதுதான் நாம் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம். திருமணத்தைப் பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?", அவள் கேட்டாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Wednesday, September 1, 2010

தனது அறைக்கு சென்றபின் ராமன் இந்த நாளில் நடந்ததைப் பற்றிச் சிந்தித்தான். இந்த நாள் அவன் தனது வாழ்நாளில் இதுவரை அதிகம் கஷ்டப்பட்ட நாள் என்று நினைத்துக் கொண்டான். அதே நேரத்தில் இன்றுதான் தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் முடிவு செய்துகொண்டான். அவனது உதடுகள் கீதா, கீதா என்று முணுமுணுத்தன. முகம் முழுவதும் நிரம்பிய பெரிய புன்னகையுடன் தனது கண்களின் முன்னாள் தெரிந்த அவளுடைய உருவத்தைக் கண்டு ரசித்தான். அவளோடு இருந்த ஒவ்வொரு வினாடியும் அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. கல்லூரியிலிருந்து அவனுக்குப் பல அழகான பெண்களைத் தெரியும். அவர்கள் ஒன்றாகவே படித்தார்கள். மெரீனா கடற்கரைக்கோ அல்லது காப்பி குடிக்கவோ சேர்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் கீதாவைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அடக்க முடியாத உணர்ச்சி எந்தப்பென்னிடமும் அவனுக்கு ஒரு பொழுதும் உண்டானதில்லை. அன்று அவன் எந்தவிதக் கனவுகளும் இல்லாமல் அயர்ந்து நன்றாகத் தூங்கினான்.

கீதாவும் அந்த நாளில் நடந்தவைகளைப் பற்றி நினைத்தாள். இந்த நாள் மாரியம்மன் கொடுத்த பரிசு என்று எண்ணினாள். அதே நேரத்தில் வருங்காலத்தைப் பற்றி எண்ணும் பொழுது அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ராமனின் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்? அல்லது அவனுக்கும் வேறு பெண் பார்த்திருப்பார்களோ? அவளைப் பற்றித் தெரிந்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது போன்ற எண்ணங்கள் அவளுக்குத் தோன்றின. இந்தத் தடவை அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை. வரும் நாட்கள் மகிழ்ச்சியுடையதாகவும், அதிர்ஷ்டமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று வேண்டினாள். இதுதான் இரவு முழுவதும் அவளது சிந்தனையாக இருந்தது. சூரியன் தனது பலமான கதிர்களுடன் உதித்த நேரத்திலும் அவள் விழித்துக் கொண்டுதானிருந்தாள்.

மறுநாள் காலை சரியாக 9 மணிக்கு வந்து BMW காரில் அவளைக் கூட்டிச் சென்றான் ராமன்.

"நீங்கள் பெரிய பணக்காரரா?" வியப்பினால் இன்னும் பெரிதான கண்களுடன் அவள் கேட்டாள்.

"ஒரு கிரடிட் கார்டு இருந்தால் போதும், இது மாதிரி ஒரு காரை ஓட்ட", சிரிப்புடன் பதிலளித்தான் ராமன்.

எல்லா இளைஞர்களைப் போல் அவனும் BMW காரை விரும்பினான். இல்லை, மிகவும் நேசித்தான் என்றே சொல்லவேண்டும். காரில் போகும் பொழுது இந்த 3 நாட்களில் என்னென்ன பார்க்க வேண்டும் என்ற தனது திட்டத்தை கீதா கூறினாள்.

"முதலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகலாம்", அழகான புன்முறுவலுடன் கூறினாள் கீதா.

"கிளி ஜோஸ்யரைத் தேடப் போகிறீர்களா?" அவன் குறும்புடன் அவளைப் பார்த்தான்.

"இல்லை நான் கோவிலுக்குப் போக ஆசைப்படுகிறேன். அதன் பிறகு நாம் லிட்டில் இந்தியாவில் சுற்றி வரலாம். பிறகு சைனா டவுனுக்குப் போகலாம். நிச்சயம் மாரியம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். அது நமது கோவில், எப்பொழுதும் நமது கோவிலாகவே இருக்கும்", என்றாள் கீதா.

அவன் கனவு காணும் அவளது கண்களைக் கவனித்தான். அவளது புத்திசாலித்தனம் நிறைந்த மனதில் இப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்பதை எண்ணி வியந்தான்.

கீதாவும் ராமனும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். நம்பர் 141, செரங்கூன் சாலையில் அமைந்திருந்த இந்தக் கோவில் சிங்கப்பூரிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இது முதன்முதலில் வேலை செய்ய வந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இதுதான் செரங்கூன் பகுதியில் கட்டப்பட்ட முதல் கோவிலாகும். இது அங்குள்ள இந்தியர்களின் சமுதாய மற்றும் கலாச்சார வாழ்வின் மையமாக உள்ளது. இக்கோவிலின் முதல் பெயர் "சுண்ணாம்புக் கம்பம் கோவில்". சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படும் கிராமங்களில் இருக்கும் கோவில் என்பதே இதன் அர்த்தம். எல்லாச் சிலைகளும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை. கீதா மூச்சு விடாமல் ஒவ்வொரு சிலையைப் பற்றியும் அவனுக்கு விளக்கமாகச் சொன்னாள். இந்த இரண்டு வாரத்தில் அவள் எத்தனை தடவை இங்கு வந்திருந்தாள் இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்று எண்ணி வியந்தான். அவர்கள் இங்கு இந்தியாவில் இருப்பதைப் போலவே உள்ள உணர்ச்சியை அனுபவித்தார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுத்தது. அவர்கள் சிங்கப்பூரில் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி உரையாடினார்கள். கீதா தென்னிந்திய இனிப்பு சாப்பிட விரும்பியதால் அவர்கள் லிட்டில் இந்தியாவில் அதையும் அனுபவித்தார்கள்.

அதன் பிறகு அவர்கள் சைனா டவுனுக்கு வந்தார்கள். அங்கு அவள் மாரியம்மன் கோவிலைத் திரும்பவும் பார்க்க விரும்பினாள். ஒரு வேலை ராமன் தனக்கு கணவனாக அமைந்தால் முதலில் இந்தக் கோவிலுக்குத்தான் அவனுடன் வரவேண்டும் என்று நினைத்தாள். அவளது முகம் சிவந்தது. எப்பொழுதும் போல அவன் அவளது அழகான முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது வாயிலிருந்து எந்த விதமான விமர்சனமும் வரவில்லை. அவன் அவளை மிகவும் ரசித்துக்கொண்டிருந்தான் என்று சொல்வதே இங்கு மிகப்பொருத்தமாகும்.

இங்கு கீதாவைச் சந்தித்தேன். அடிக்கடி நாங்கள் இங்கு வர வேண்டும் என்பதே அவன் மனதில் ஓடிய எண்ணங்கள். இந்தக் கோவிலிலும் அவள் எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கிக் கூறினாள். சிறு குழந்தையிலிருந்தே அவள் இங்கு வளர்ந்தவளைப் போல எல்லாமே தெரிந்திருக்கிறதே என்று வியப்புடன் பெருமையும் அடைந்தான் ராமன். பெண்கள்தான் ஆண்களை விட கடவுளுக்குப் பக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணினான் அல்லது தங்கள் கணவனிடமிருந்து, குடும்பத்திடமிருந்து மற்றும் சமூகத்திலிருந்து தற்காலிகமாகத் தப்புவதற்கான இடம் கோவில்தானோ என்றும் எண்ணினான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Monday, August 30, 2010

அது ஒரு பங்களா. சிறிய, ஆனால் அழகாக பராமரிக்கப்பட்ட தோட்டமும் அதைச் சுற்றி இருந்தது. அவள் கதவைத் திறந்தாள். இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"அப்பா, அம்மா, இங்கே பாருங்கள். நான் ஒரு விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்", என்று உரத்த குரலில் கூறினாள் அவள்.

அவர்கள் முன் அறையில் காத்திருந்தார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவரும் அவரது மனைவியும் வந்தனர்.

இவர்கள் என் பெற்றோர்கள். இவர்... அவன் பெயர் தெரியாமல் அவள் தயங்கினாள். இன்று நடந்த குழப்பத்தில் அவள் அவனது பெயரை இன்னும் சரியாக காத்து கொடுத்துக் கேட்கவில்லை. அவள் புன்முறுவலுடன் ராமனை அவளது பெரிய கண்களால் நோக்கினான்.

"உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள் நாணத்துடன்...

"எனது பெண் ஒரு பெயர் தெரியாத விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்", என்று கூறிய அவள் தந்தை பலமாகச் சிரித்தார்.

ராமனின் முகம் சிவந்துவிட்டது. "எனது பெயர் ராமன். நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன், ஐயா", என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"நான் அருணாச்சலம்", என்றார் அவள் தந்தை. அவர்கள் தங்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். "என்னிடம் சீதா இல்லை, ஆனால் கீதா இருக்கிறாள்", தனது மகளைச் சுட்டிக் காட்டினார் அவர்.

"இப்பொழுது அவளின் பெயரும் எனக்குத் தெரியும்", கூறிச் சிரித்தான் ராமன். அவளது அம்மாவிற்கும் அவன் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான். அங்குள்ள சோபாவில் அமர்ந்தார்கள்.

"காப்பி, தேநீர் அல்லது பழச்சாறு - மாம்பலம், ஆரஞ்ச், அன்னாச்சிப்பழம் மற்றும் எலுமிச்சையும் இருக்கிறது", என்று கூறிய கீதா, அவன் பதிலளிக்கும் முன்பே தனது தாயிடம் கூறினாள்.

"அம்மா, அவருக்கு நல்ல பசி. சோறு, சாம்பார், காய்கறிகளுடன் தென்னிந்தியச் சாப்பாட்டைச் செய்யுங்களேன்."

ராமன் வேண்டாமென்று மெதுவாகத்தான் மறுத்தான். தண்ணீர் மட்டுமே போதுமே என்று கூறினான்.

"அரை மணி நேரத்திற்குள் நான் ஏதாவது சமைக்கிறேன்", கீதாவின் அம்மா கூறினாள். கீதாவும் அம்மாவிற்கு உதவி செய்ய விரும்பியதால் இருவரும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

"ராமன், உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றார் அருணாச்சலம். "உங்களைப் பார்த்தால் ஒரு உல்லாசப் பயணி போல் இருக்கிறது."

ராமன் தான் சிங்கப்பூருக்கு வந்ததின் காரணத்தை அவரிடம் கூறினான்.

"நான் B.E. முடித்துவிட்டேன். ஒரு வருடம் வேலை பார்த்த பிறகு M.E. படிக்கப் போகிறேன். ஆனால் எனது குறிக்கோள் பின்னால் Ph.Dயையும் முடித்துவிட்டு மக்களுக்கு உபயோகமான ஆராய்ச்சிகள் செய்வதுதான்", கூறினான் ராமன்.

"மிகவும் நல்லது. நாங்கள் டாக்டர் பட்டம் இல்லாமலேயே வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் இந்தக் காலத்தில் அது இல்லாமல் முன்னேறமுடியாது", அவர் கூறினார்.

"ஜெர்மனியில் இருக்கும் எனது மாமா, எங்கு அதிகம் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றனவோ அங்குதான் நல்ல சம்பளமுள்ள வேலைகளும் உருவாக்கப்படும் என்று அடிக்கடி கூறுவார்", என்றான் ராமன்.

"இது மிகவும் ஞானமுள்ள வாக்கியம்", என்றாம் அருணாச்சலம்.

"உங்கள் கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது? உங்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்களா?" அவர் கேட்டார். "உங்களைச் சுற்றி பெண்கள் வரவில்லையா?" மேலும் கேட்டுச் சிரித்தார்.

"ஐயா, எனக்கு ஆண், பெண் நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு ஒழுக்கத்தைப் பற்றிய கோட்பாடுகள் மிகவும் முக்கியமானவை. பெண்களை நான் மிகவும் மதிப்பவன். ஒரு பெண்ணை மனதில் கூட நான் தவறான எண்ணத்தில் பார்ப்பதில்லை", மிகத் தீர்மானமான குரலில் அவன் சொன்னான்.

"உங்கள் கொள்கை மிகவும் உயர்ந்தது", என்றார் அருணாச்சலம்.

"இவனை அடையக் கொடுத்து வைத்திருக்கும் அதிர்ஷ்டமான பெண் யாரோ?" என்று அவர் மனம் எண்ணியது. அவர்கள் இந்திய அரசியலைப் பற்றி, பணச் சந்தையிலிலுள்ள பிரச்சினைகள், சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் மற்றும் ஆண்கள் பேசும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராமனின் விரிவான, கூர்மையான அறிவு அருணாச்சலத்தை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாம்பார், வெண்டைக்காய் பொரியல், ரசம், தயிருடன் கிடைத்த தென்னிந்திய உணவை ராமன் மிகவும் ரசித்துச் சாப்பிட்டான்.

"கீதா இன்று முதல்முறையாகச் சமையல் செய்ய உதவியதால் சீக்கிரம் முடிந்தது", என்றால் கீதாவின் அம்மா.

முதன்முறையாக கீதாவின் முகம் சிகப்பானத்தை அவன் கவனித்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

"எப்பொழுது சென்னைக்குப் போகிறீர்கள்", அருணாச்சலம் கேட்டார்.

இதற்குள் சாப்பாடும் முடிந்தது.

"ஞாயிற்றுக்கிழமை நான் சென்னைக்குச் செல்கிறேன். சிங்கப்பூரை பார்ப்பதற்கு இன்னும் எனக்கும் 3 நாட்கள் இருக்கின்றன", ராமன் பதிலளித்தான்.

"சிங்கப்பூரை அவருக்கு சுற்றிக்காட்ட விரும்புகிறேன். நான் இரண்டு தடவையாவது எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அம்மா, உங்கள் அனுமதியுடன் நானே இவருக்கு சுற்றிக்காட்டலாமா?" கீதா குறும்புச் சிரிப்புடன் அம்மாவைக் கேட்டாள்.

"மாலைச் சாப்பாட்டிற்கு நீங்கள் இருவரும் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தால் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது", அம்மா சாந்தமாக சொன்னாள்.

"எனக்கு சம்மதமே", அம்மா சொன்னதை ஆமோதித்தார் அருணாச்சலம்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போவதாக ராமன் சொன்னான். சிறிது நேரம் கழித்து அருணாச்சலம் அவனைத் தனது காரில் அவனது ஹோட்டலில் இறக்கிவிட்டார்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Saturday, August 28, 2010

"என் பெயர் ராமன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். வேலையில் சேர்வதற்கு முன்பு ஒரு வாரம் இங்கு உல்லாசப் பயணத்திற்கு வந்திருக்கிறேன். இது ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்கில் இருக்கும் எனது மாமா கொடுத்த பரிசு. கூட்டத்தோடு இங்கு வருவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆகையால் நான் தனியாக வந்தேன்." ராமன் பதிலளித்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. ஏன் எனக்காகக் காத்திருந்தீர்கள் என்று சொல்லாவிட்டால் நான் எழுந்து போய்விடுவேன்," அவளது குரல் உறுதியாக ஒலித்தது.

"நான் அதற்கான காரணத்தைச் சொன்னால் நீங்கள் என்னை நிச்சயம் பைத்தியம் பிடித்தவன் என்றுதான் நினைப்பீர்கள்", ராமன் கூறினான்.

"உங்களுக்கு பைத்தியமோ இல்லையோ, அது என் பிரச்சினையில்லை. ஆனால் அந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நான் இப்பொழுதே சென்று விடுகிறேன்". இதை சொல்லிவிட்டு அவள் போவதற்காக எழுந்துவிட்டாள்.

அவளுடைய கண்களில் அவன் அந்தச் சோகத்தை கண்டான்.

"நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன? இங்கு என்ன செய்கிறீர்கள்? எல்லாவற்றையும் அறிய விரும்புகிறேன்", கேட்டான் ராமன்.

"என்னிடமிருந்து ஒரு பதிலும் வராது. இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது நீங்கள்தான். வெளிப்படையாக பேசுங்கள். மேலும் திரும்பித் திரும்பிக் கேட்க நான் விரும்பவில்லை", கூறினாள் அவள்.

"எப்படியோ ஒரு வழியில் நாம் எல்லோருமே பைத்தியம்தான். ஆகையால் நான் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறேன் என்பது இங்கு முக்கியம் இல்லை", என்றாள் அவள்.

ராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். இப்பொழுது பதில் சொல்லாவிட்டால் அவள் போய்விடுவாள் என்பதையும் புரிந்து கொண்டான்.

"இது ஒரு பெரிய கதை. கவனமாக கேளுங்கள்", என்ற ராமன் ஆரம்பித்தான். அவர்கள் மேலும் இரண்டு கப் காப்பி கொண்டு வரச் சொன்னார்கள். அவனுடைய கதையைக் கேட்பதற்கு அவள் மிகவும் ஆவலாக இருந்தாள்.

"கதைகளோ அல்லது கனவுகளோ அவற்றை நான் விரும்புகிறேன். உங்கள் கதையும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்", புன்னகையுடன் அவள் கூறினாள்.

"30௦ நிமிடங்களில் நான் போக வேண்டும். எனது பெற்றோர்கள் எனக்காக காத்திருப்பார்கள்", தொடர்ந்து கூறினாள் அவள்.

"சிங்கப்பூர் உங்கள் சொந்த ஊரா?" அவன் கேட்டு முடிக்கும் முன்பே, அவள் அவனைப் பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டாள், எழுந்து சென்றுவிட்டாள்.

சாப்பிட்டதற்கு மேசை மேல் சில சிங்கப்பூர் டாலர் நோட்டுக்களை வீசிவிட்டு ராமன் அவள் பின்னால் ஓடினான்.

"நில்லுங்கள் நான் நடந்ததையெல்லாம் சொல்லுகிறேன்", சற்று உயர்ந்த குரலில் கூறினான் ராமன்.

"இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது", என்றாள் அவள்.

அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவள் அமைதியில்லாமல் இருந்தாள். எல்லாவற்றையும் உடனே அறிய விரும்பினால். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் ஒரே மாதிரித்தான் என்று அவள் நினைத்தால். கூட்டமிருந்த பூங்காவில் நுழைந்து ஒரு மூலையில் அவர்கள் அமர்ந்தார்கள். அவள் தனது காதைக் காட்டி அவனது கதையை கேட்பதற்கு தயாராக இருப்பதாக ஜாடை காட்டினாள். அவளிடமிருக்கும் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ராமன் அவளிடம் தனது மாமாவின் சிங்கப்பூர் பயணப் பரிசைப் பற்றிச் சொன்னான். அவன் தனது சுதந்திரத்தை மிகவும் விரும்புவதால் தனியாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் சொன்னான். தான் எடுத்த முடிவு மிகவும் சரியானதே என்று சிரித்துக்கொண்டே சொன்னான். ஒரு பயணக்குழுவுடன் வந்திருந்தாள் இவ்வளவு நேரம் செலவழித்து என்னால் அவளை கண்டு பிடிக்க முடிந்திருக்குமா? என்று எண்ணினான். அவனுடைய சிரிப்பை அவள் ரசித்தாள். அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான் என்றும் எண்ணினால். அவளைவிட அவன் நிச்சயமாக 10 செ.மீ. உயரமாக இருப்பான். கல்லூரியில் தனது தோழிகளுடன் இளைஞர்களைப் பற்றிப் பேசியதையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் மிகவும் சோர்ந்து போயிருக்கிறான். அதன் காரணத்தை எப்படியும் கண்டுபிடித்து விடுவேன் என்று அவள் நம்பினாள். அவன் மெதுவாக அவளிடம் நடந்ததையெல்லாம் விரிவாகக் கூறினான். லிட்டில் இந்தியாவில் நடந்ததைப் பற்றியும் கிளி ஜோஷ்யரைப் பற்றியும் கூறினான். அவன் கூறுவதை அவள் மிகக் கவனமாகக் கேட்டால். அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனதில் ஆழமாகப் பதிந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தது, இந்த அழகான, கவர்ச்சியான, வினோதமான இளைஞனைச் சந்திப்பதற்காகத்தானோ என்று எண்ணினாள். இதனால்தான் மாரியம்மன் கோவிலில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மெதுவாக அவன் சொல்லி முடித்தான்.

அவளது கண்கள் மூடியிருந்தன. அவன் சொன்னதை அவள் ஜீரணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் போலத் தோன்றியது. ராமன் அவளது கவர்ச்சியான முகத்தை ஆசையோடு நோக்கினான். இவளுக்காக எனது சென்னை திரும்பும் பயணம் வரை கூடக் காத்திருப்பேன் என்றும் அவன் எண்ணினான்.

"லிட்டில் இந்தியாவிற்குப் பொய் கிளி ஜோஸ்யரைத் தேடுவோம்", என்று கூறிய அவள், வந்த ஒரு டாக்சியையும் நிறுத்தினாள்.

டாக்சி டிரைவரிடம் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகும்படி கூறினாள். டாக்சியில் இரவருமே தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி அமைதியாக இருந்தார்கள். அங்கு எந்த இடத்தில் கிளி ஜோஸ்யரைப் பார்த்தான் என்பதை காட்டினான். அங்கு பக்கத்திலிருந்த கடைகளிலெல்லாம் விசாரித்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக யாருமே அவரைப் பார்க்கவில்லை. இறுதியில் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோர்களைச் சந்திக்கலாம் என்று அவள் கூறினாள். ஒரு வேலை அவள் தாய் அவனுக்கு நல்ல சாப்பாடு போடலாம் என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள்.

"அப்படியானால் நீங்கள் சிங்கப்பூர்வாசிதானே", என்று அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் கேட்டான்.

"ஆமாம், நான் கடந்த 14 நாட்களாக இங்கு இருக்கிறேன். இன்னும் சில நாட்களுக்கு இங்கு இருப்பேன்", அவள் சிரித்துக் கொண்டே பதிலளித்தால்.

"என் பெற்றோர்களை இங்கு விட்டுவிட்டுத் தனியாக நான் இந்தியாவிற்குத் திரும்பிப் போக வேண்டும்", தொடர்ந்தாள் அவள்.

அவள் கண்களில் கண்ட சோகத்தை இப்பொழுது புரிந்து கொண்டான்.

"ஏன் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இங்கு தங்கக் கூடாது? சிங்கப்பூர் மிக நல்ல இடம்தானே", என்றான் ராமன்.

"எனது முதுநிலைப் படிப்பை மதுரையில் முடிக்க விரும்புகிறேன். அதன் பிரக் எம்.பி.ஏ. படிக்க இங்கு திரும்பி வருவேன். எனது பெற்றோர் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு ஒரே பெண். அவர்களை 2 வருடத்திற்கு நான் இங்கு தனியாக விட்டுச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் அதைக் காட்டினால்தான் நான் இன்னும் கவலைப்படுவேன் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்", என்றாள் அவள் மெதுவாக.

"நீங்கள் மேற்கொண்டு எதுவும் அறிய விரும்பினால் அவர்களிடமே நேரில் கேட்டுக்கொள்ளுங்கள். வாருங்கள், போகலாம்", என்று கூறிவிட்டு அவள் டாக்சி ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Friday, August 27, 2010

சரியான தூக்கமில்லாததால் மறுநாள் காலையில் ராமன் மிகவும் சோர்வாக இருந்தான். எழுந்திருக்க மனமில்லாமல் எந்தவித குறிக்கோளுமில்லாமல் படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து விரைவாக எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். ஆனால் காலை உணவை உண்ண அவனுக்கு விருப்பமில்லை. ஒரு கப் காபியை மட்டும் குடித்துவிட்டு லிட்டில் இந்தியாவிற்கு கிளம்பினான். கிளி ஜோஸ்யரிடம் பேச விரும்பினான். ஆனால் எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. மறுபடியும் கிளி ஜோஸ்யரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்.

"மாரியம்மன் கோவிலுக்குப் போய் உனது இளவரசியைப் பார்" என்ற வார்த்தைகள் ஒழித்துக் கொண்டே இருந்தன. ஒரு வேளை அவளைத் தவற விட்டு விடுவேனோ என்று எண்ணியதுமே அவன் மிகவும் திகிலடைந்தான். விரைவாக ஒரு டாக்சியில் மாரியம்மன் கோவிலை அடைந்தான் ராமன்.

அது ஒரு புழுக்கமான நாள். அதிக மக்கள் அங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு எல்லா இந்தியர்களையும் பார்த்தான். ஏறக்குறைய எல்லா இனத்தவரும் அங்கு காணப்பட்டனர். ஆனால் அழகான முகத்துடன், சோகமான கண்களுடன், நீல நிறச் சேலையணிந்த பெண்ணை அவனால் அங்கு காண முடியவில்லை. "அவளை இன்று பார்த்தல் பின் தொடர்ந்து செல்ல மாட்டேன். நான் காத்திருக்காமல் உடனே பேசுவேன்," என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். காத்தக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாளைப் போல நீண்டதாக இருக்கிறது என்று எண்ணினான். தான் இன்னும் இரண்டு நாட்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்த அதே ராமன்தானா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது. ஏழு மணி நேரத்திற்கு மேலாக அவன் காத்துக்கொண்டிருந்தான். காலை உணவும், மதியச் சாப்பாடும் இல்லாமல் அவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். "நான் நேற்றுப் பார்த்தது ஒரு மாயத்தோற்றம்", என்று எண்ணினான். ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையும், எக்காரணத்தைக் கொண்டும் இன்று அவளைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் அவனிடம் வலுவாக இருந்தது. மிகுந்த ஏமாற்றத்தால் அவன் தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கினான். அதற்குக் காரணம், இப்பொழுது அவன் அந்த நீல நிறச் சேலையை அணிந்த அழகியின் மேல் ஒரே குறியாக இருப்பதுதான் என்று எண்ணினான். அதே நேரத்தில் இந்தத் தெரியாத பெண்ணிற்காகத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோமே என்று ஆச்சரியப்பட்டான்.

இறுதியாக இன்னொரு நீல நிறப் புடவையணிந்து அந்த இளம் பெண் லட்சணமாக வந்தால். அவள் கோடி போல் மெலிந்து அழகாக இருந்தாள். கம்பீரமான தோற்றத்துடன் ஆனால் சோகமான கண்களுடன் அவள் அவனைக் கடந்து சென்றாள். அவனது உயரத்திர்க்கேற்றவளாகவே அவள் இருக்கிறாள் என்று எண்ணினான். அவள் முடி மிகவும் நீளமாக இருந்தது. அவளைப் போன்ற ஒரு அழகியை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. இப்பொழுது அவனது பசி மற்றும் சோர்வும் பறந்து போய்விட்டது. அவருடன் உடனே பேச விரும்பினான். ஐந்து பெரிய எட்டில் அவளை அடைந்து "என்ன, எப்படி இருக்கிறீர்கள்," என்று முகம் முழுவதும் சிரிப்புடன் அவளைக் கேட்டான், அவள் நின்றாள்.

"ஹலோ, என்ன வேண்டும் உங்களுக்கு?" அவள் கேட்டாள்.

"நான் இந்தியாவிலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். உங்களுடன் பேச விரும்பிகிறேன்," என்றான் ராமன்.

"நானும் இங்கு புதிதுதான்," என்று தனது அழகான பேசும் கண்களுடன் அவள் பதிலளித்தாள்.

"அது நல்லது, அப்படியானால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் சேர்ந்தே சுற்றிப்பார்கலாமே," அவன் ஆலோசனை கூறினான்.

"நீங்கள் சோர்வாகக் காணப்படுகிறீர்களே?" அவள் கேட்டாள்.

அவன் அந்தக் கேள்வியைச் சட்டை செய்யவில்லை.

"எவ்வளவு நாட்களாக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்?" அவன் கேட்டான்.

"இரண்டு வாரங்கள், நான் எல்லாவற்றையும் அநேகமாகப் பார்த்து விட்டேன். இந்தக் கோவில் மிகவும் அற்புதமானது. இங்கு நான் தினமும் வந்து கொண்டிருக்கிறேன்." அவள் பதிலளித்தாள்.

அவளது வார்த்தைக்கு புள்ளி வைக்கும் வேலையில் "தினமும் ஒரு நீல நிறப் புடவையுடன்தானா?" அவன் புன்முறுவலுடன் கேட்டான்.

"எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.

"நான் வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. நான் இன்னும் ஒன்றுமே பார்க்கவில்லை," அவன் சிரித்தான்.

அழகான கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். அவளது நெற்றியில் உண்டான சுருக்கங்களைக் கூட ராமனால் காண முடிந்தது. "உங்களுக்கு என்ன ஆயிற்று?" ஏன் இவாளவு சோர்வாக இருக்கிறீர்கள்? இந்த கேள்விகளைக் கேட்ட அவளது முகமும் குரலும் அவளது கவலையை காட்டியது. "உடம்பு சரியில்லையா?" கேட்டாள் அவள்.

"நேற்று மதியத்திலிருந்து சாப்பிடாமல் உங்களுக்காக இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன்," ராமன் மெதுவாக முணுமுணுத்தான்.

அவளது கண்களில் உண்டான ஆச்சரியத்தை அவன் கவனித்தான். சில நொடிகள் அவள் மெளனமாக இருந்தாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனது நரம்புகள் தளர்ந்துவிட்டன. மிகுதியான சோர்வை இப்பொழுதான் அவனால் உணர முடிந்தது.

"நாம் எங்காவது ஒரு உணவகத்தில் உட்கார்ந்து பேசலாமா?" என்று கேட்டான் ராமன்.

"எனக்கு ஆட்சேபனையில்லை. பக்கத்தில் ஒரு உணவகம் இருக்கிறது. நாம் அங்கு போகலாமே", அவள் பதிலளித்தாள். அவள் நடக்க ஆரம்பித்தால். அவனும் மெளனமாக அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் எதுவும் பேசாமல் ஐந்து நிமிடங்கள் நடந்தார்கள். அவர்கள் உணவகத்தில் நுழைந்தார்கள். அவள் சாலையை பார்க்கும்படியாக ஜன்னல் பக்கத்திலிருந்த மேசைக்குச் சென்றாள்.

"என்ன சாப்பிடப் போகிறீர்கள்?" அவள் அவனைக் கேட்டாள்.

"நான் ஒரு மிகப்பெரிய ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறேன். எனக்கு பசி மிகவும் அதிகம்", ராமன் மெதுவாகச் சொன்னான்.

"நான் ஒரு கப் காபி குடிக்கப்போகிறேன்", என்றாள் அவள். இவற்றை அவள் சர்வரைக் கொண்டு வரச் சொன்னாள்.

அவர்கள் இருவரும் அங்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில், "இனிமேல் என்ன நடக்கப் போகிறது", என்று தன்னைத்தானே அவன் கேட்டுக்கொண்டான். நடந்தது எல்லாவற்றையும் அவன் அவளிடம் சொல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் அதைக்கேட்டவுடன் அவனைப் பைத்தியக்காரன் என்று நினைப்பாளோ என்று அஞ்சினான். அவள் அவனது கண்களை கூர்ந்து நோக்கினாள். அவன் ஏன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று வியந்தாள். அவன் யார் என்பது அவளுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது. அவன் அவளுக்கு அந்நியன். ஆனால் அவனோடு இங்கு உட்கார்ந்து, காப்பி சாப்பிட்டு அவனது கதையை கேட்பதை அவள் விரும்பினால். ஊர், பெயர் தெரியாத இந்த இளைஞனுக்கு அவள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பது அவளுக்கே விளங்கவில்லை.

ராமன் ஐஸ்கிரீமை மிக வேகமாகச் சாப்பிட்டுமுடித்துவிட்டான். அவள் அவன் சாப்பிடுவதைக் கூர்மையாகக் கவனித்து கொண்டிருக்கும் நேரத்தில் "என் கதையைக் கேட்டால் இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாளோ? என்னைப் பைத்தியம் என்று நினைப்பாளோ? என்னை உதாசீனம் செய்துவிடுவாளோ?" எண்ணினான் அவன். அவனது மனதுக்குள் சில சஞ்சலங்கள் தோன்றின.

"எதற்காக எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது," அவள் கேட்டாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8