Thursday, September 30, 2010

எல்லாச் செய்திகளையும் வாசிப்பது ராமனின் வழக்கம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல அரசியல் வித்தைகளையும் அவன் ஆழ்ந்து படித்திருக்கிறான். இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்பது அவனது விருப்பம். மேலும் இந்தியன் என்ற முறையில் ராமர் பாலத்தை அளிப்பதையும் அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் ஒரு நல்ல சமரசத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இதனால் மிக நல்ல விளைவுகள் ஏற்படும் என்றே கருதினான். ராமர் பாலத்தை ஒட்டி ஒரு சிறு கால்வாய் வெட்டுவதை ராமன் ஒரு வேடிக்கை என்றே கருதினான். இதற்கு எடுக்கப்படும் முடிவு நல்லததாகவும், மிகச் சிறந்ததாகவும், உலகில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினான். பலவித மக்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் சிங்கப்பூரைப் பற்றி எண்ணினான். "நான் அதற்கான பதிலைக் கண்டுபிடித்து விட்டேன்", என்று உரக்கக் கூறினான். அவனது மூளை பயங்கர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த 5 நாட்கள் சிங்கப்பூரில் நடந்தவையெல்லாம் அவன் கண்கள் முன்னாள் படம் போல ஓடின. அங்கிருந்த பல மிகச் சிறந்த காரியங்கள் சுத்தம், ஒழுங்கு, பல கலாச்சாரத்தினர், மதத்தினரும் இணைந்து வாழ்தல் மற்றும் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்ட எல்லாத் திட்டங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

"ஒரு புதிய சிங்கப்பூர், இருப்பதை விட மேலான, உயர்ந்த சிங்கப்பூர் இங்கு உருவாக்கப்படுவதுதான் சிறந்த பதில்", எண்ணினான் ராமன். இது முன்னேறி வரும் இந்தியாவிற்கு நல்லது. மேலும் இது கீதாவுக்கும் நல்லது. ஏனெனில் இதை நிறைவேற்றி கீதாவிற்கு அர்ப்பணித்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இந்த இந்தியச் சிங்கப்பூரைப் பற்றி பேசும், வாசிக்கும் பொழுதும் கீதாவைப் பற்றியும் நினைப்பார்கள் என்று எண்ணினான்.

"ஏன் இந்தியச் சிங்கப்பூர் என்று அழைக்கவேண்டும். நான் இதற்கு வேறு ஒரு புதுப்பெயரைச் சூட்ட விரும்புகிறேன். இதை ராமர் தீவு என்றே அழைக்கவேண்டும். ஆமாம், இந்த ராமர் தீவு, ராமர் பாலம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் ஒரேயடியாகத் தீர்த்துவிடும். அதே நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா வல்லரசாகவும் இதுவும் ஒரு பங்கு வகிக்கும். இதை சிங்கப்பூருடனும் அல்லது ஹாங்காங்குடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவில் ராமேஸ்வரத்திற்குப் பக்கத்திலிருப்பதால் இது தனிச் சிறப்பையும் பெற முடியும்", ராமன் எண்ணினான். அவன் இந்த இடங்களுக்கு இன்னும் போனதில்லை. ஆனால் அவனுக்குத் தமிழ்நாட்டின் பூகோள சாஸ்திரத்தைப் பற்றி நல்ல அறிவு இருந்தது. "கீதாவிற்கு இது எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஏனெனில் அவள் அதைப் பார்க்க முடியும், ரசிக்க முடியும்", என்றும் எண்ணினான் ராமன்.

கீதா திடீரென்று எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் எங்கிருக்கிறாள் என்பது சிறிது நேரம் அவளுக்குப் புரியவில்லை. பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த ராமனைப் பார்த்தாள். அவனது உதடுகளில் புன்முறுவலைக் கண்டாள். அவன் ஏதோ முனுமுனுப்பதைப் போல இருந்தது. அவளது காத்து அவனது உதடுகளை நெருங்கியது. அவனது உதடுகளிலிருந்து இன்பகரமான ஆச்சரியத்துடன் கீதாவின் பெயரைத்தான் ராமன் சொல்லிக்கொண்டிருப்பதை அவள் கேட்டால். அவனது முகத்தில் ஓடிய வசீகரமான, மகிழ்ச்சியுடன் கலந்த உணர்ச்சிகளையும் அவனது கவர்ச்சியான புன்னகையையும் அவள் மூன்று மணி நேரங்களுக்கு மேல் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள பப்பா,

நான் அவரை மிக அதிகமாகக் காதலிக்கிறேன். உங்களிடம்தான் இதை முதன்முதலாகத் தெரிவிக்கிறேன். அம்மாவிடமும் சொல்லிவிடுங்கள்.

உங்களிருவருக்கும் எனது அன்பைத் தெரிவிக்கிறேன்...

கீதா.

இன்னும் இரண்டு மணி நேரம் வேகமாக ஓடியது. அவள் ராமனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனது மனதில் என்னதான் அவ்வளவு முக்கியமானது ஓடுகிறது என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

ராமன் கீழக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்தைப் பற்றி உடனே எண்ணினான். கீழக்கரைக்குக் கீழே மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்து தேவிப்பட்டிணம் தாண்டி மூன்று கிலோமீட்டர் வரை ஒரு கால்வாய் வெட்ட விரும்பினான்.

ராமனுக்கு இப்பொழுது ராமர் தீவு உருவாகிவிட்டது, பிறந்துவிட்டது.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Wednesday, September 29, 2010

"நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் சென்னையில் தனியாகத் தங்க வேண்டியிருக்கிறது. நாம் நல்ல நண்பர்கள். நான் உங்களை என்னுடன் தங்குமாறு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் என்னை மதுரையில் எனது பாட்டியிடம் கொண்டு விட்டீர்கள் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்", என்றாள் கீதா அன்பாக.

இதுதான் ராமனின் வாழ்வில் அவன் முதன்முதலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நாள். அவன் கீதாவைப் பார்த்து அழகாகச் சிரித்தான். எனக்கு இந்த சுவாரசியமான வேலையைச் செய்ய எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறி அவளுக்குச் சம்மதமளித்தான் ராமன். ராமனின் இரண்டு கரங்களையும் தனது கைகளில் எடுத்துக்கொண்டு மெதுவாக அழுத்தி அவள் அவனுக்கு நன்றி சொன்னாள். விமானம் சென்னையில் இறங்கி விட்டது. அவர்களுக்கிடையில் நடந்த இந்த சூடான விவாதத்தில் இருவருமே அதைக் கவனிக்கவில்லை.

கீதாவும் ராமனும் டாக்சியில் சென்று ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்தார்கள். அவள் தனது மனைவி என்று எழுதியதை அவள் அரைக் கண்ணால் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவர்கள் அறைக்குச் சென்றார்கள். அது ஒரு பெரிய அறை. அதில் தற்காலத்திலுள்ள எல்லா வசதிகளும் இருந்தன. ஆண், பெண்களுக்கான எல்லாத் தேவைகளையும் அளவுக்கதிகமாகவே எண்ணத்தில் கொண்டு வசதிகளைச் செய்திருந்தார்கள். கீதா மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவள் குளியலறைக்குச் சென்றாள். ராமன் சோபாவில் அமர்ந்தான். கண்களை மூடினான். விமானத்தில் அவளுக்கும் அவனுக்குமிடையில் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை வார்த்தைக்கு வார்த்தை திரும்பவும் அசைபோட ஆரம்பித்தான். கீதா சொன்னது சரியே என்று அவனுக்குப்பட்டது. சிறப்பான முறையில் அவளுக்குச் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்தான். மேலும் அந்தச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் மேற்கொள்ளப்படாத ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக, சிறந்த செயலாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவளுக்குத் தான் காதலின் பெயரால் இந்த விதமாக ஒரு சிறந்த செயலைச் செய்ய முடியுமா என்று எண்ணியபோது அவனது மனதில் சஞ்சலமும் பயமும் உண்டானது.

கீதாவும் ராமனும் மெரீனா கடற்கரையில் உலாவினார்கள். கபாலீஸ்வரர் கோவிலில் இறைவனைத் தரிசித்தார்கள். இறுதியில் ராமனுடைய வீட்டிருகுச் சென்று அவனது பெற்றோரைச் சந்தித்தனர்.

"நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ சிங்கப்பூரில் இருந்து வருவதில் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்", கேட்டார் ராமனின் தந்தை.

"இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலையை இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்", என்று குறும்புப் புன்முறுவலுடன் கீதாவைச் சுட்டிக்காட்டினான்.

அவனது அம்மா திறந்த வாயை மூடாமல் கீதாவைப் பார்த்து, "வாம்மா", என்று கூறினாள்.

"இந்த அழகான பெண் உனக்கு எங்கிருந்து கிடைத்தால்?" கேட்டார் அப்பா.

"ஆயா வேலையை மிகவும் நல்ல வேலை என்று இப்பொழுதுதான் நன்றாக உணருகிறேன்", என்றார் அவர் புன்முறுவலுடன்.

"இன்று நாங்கள் ஹோட்டலில் தங்குகிறோம். நாளை காலை விமானத்தில் சென்று அவளைப் பத்திரமாக அவளது பாட்டியிடம் மதுரையில் ஒப்படைத்தபிறகு நான் சென்னை திரும்புவேன். அதன் பிறகு விளக்கமாக எல்லாவற்றையும் சொல்கிறேன் அப்பா", என்றான் ராமன்.

மெதுவாக அவனது தந்தை சரி என்று தலையை ஆட்டினார். ஆனால் அம்மா சத்தமாக சொன்னாள், "ஏன் நீங்கள் இருவரும் நமது வீட்டில் தங்கக்கூடாது? நமது வீட்டில் விருந்தினருக்காக ஒரு அறை இருப்பது உனக்குத் தெரியுமே".

"உனது மகனைப் பற்றி உனக்குத்தான் மற்ற எல்லோரையும் விட நன்றாகத் தெரியும். முடிவு எடுக்கப்பட்டு விட்டது. விமான டிக்கட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. நான் திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன் அம்மா", என்று சிரித்தபடியே பதிலளித்தான் ராமன்.

தயக்கத்துடன் அவனது அம்மாவும் சரி என்று கூறினாள்.

"நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு போகலாமே", என்றாள் அம்மா.

"நேரம் வரும்பொழுது நீங்கள் எங்களுக்குத் தினமும் சமையல் செய்யலாம்", என்றான் ராமன்.

இதைச் சொல்லும் பொழுது அவனையுமறியாமல் சிரித்துவிட்டான். வேறு வழியில்லாததால் அவனது அம்மாவும் தலையை அசைத்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.

"உனது மாமாவுக்குப் போன் பண்ணினாயா?" அப்பா கேட்டார்.

"இன்னும் பண்ணவில்லை, கட்டாயம் இன்று நான் போன் பண்ணுவேன்", பதிலளித்தான் ராமன்.

கீதாவும் ராமனும் ஹோட்டலை அடைந்தவுடன் சாப்பிட்டார்கள். அவன் தனது மாமாவுக்கும் அவள் தன் பெற்றோர்களுக்கும் போன் செய்தார்கள்.

"இப்பொழுது நான் எனது இரவு உடையை மாற்றிக்கொண்டு தூங்கப்போகிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?" கேட்டாள் கீதா.

"இல்லை, நீங்கள் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள்", என்று பதிலளித்துவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே சென்னையின் இரவு அழகைப் பார்த்து ரசித்தான் ராமன்.

அவன் திரும்பிப் பார்த்த பொழுது கட்டிலில் கீதா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் சிறிது வளைந்த, அழகான கொடி போன்ற உடலுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனும் படுக்கையில் மறுபக்கத்தில் படுத்தான். தூங்கும் முன் திரும்பவும் அவன் மிகவும் ஆழ்ந்து கீதாவுடன் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை எண்ணினான் ராமன். முதல்முறையாகத் தன் வாழ்க்கையை வெறுத்தான் ராமன். இதே எண்ணங்களுடன் அயர்ந்து உறங்கிவிட்டான். அப்பொழுது அவன் ஒரு கனவு கண்டான். அது அவனுக்கும் கீதாவுக்கும் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே சிறந்தது என்று எண்ணினான். இந்த சிறந்த கனவை நனவாக்கி கீதாவிற்குச் சமர்ப்பிக்க விரும்பினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, September 28, 2010

மறுநாள் காலை 7.5 மணிக்கு ராமன் எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தயாராகிவிட்டான். 10 மணிக்கு அவனது விமானம் சென்னையில். அதன் பிறகு 4 மணி நேரத்தில் இருப்பேன் என்று எண்ணினான். ஒரு டாக்சியில் ஏறி விமான நிலையத்தை அடைந்தான். கீதா பக்கத்தில் இல்லாதது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தனது வாழ்வில் கடந்த 4 நாட்கள்தான் மிகவும் சிறந்தது என்று நினைத்தான். அவனிடம் அவளுடைய மெயில் விலாசம், செல்போன் நம்பர் இருந்தாலும் நல்ல நாட்களெல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணினான். பெட்டியைக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தின் உள் பகுதியை அடைந்த உடனேயே அவனது கண்களுக்கு எங்குமே கீதாவகத்தான் தெரிந்தது. அவனுடைய இடம் விமானத்தின் நடுவில் இருந்தது. இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான் ராமன்.

ராமன் திரும்பவும் கண்களைத் திறந்த பொழுது அவன் மேகத்திற்கு மேல் இருந்தான். சிரித்த முகத்துடன் அவனிடம் வந்த விமானப் பணிப்பெண் ஒரு துண்டுக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். அதை பிரித்துப் பார்த்தான் ராமன். அதில் நான்கே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. "நானிருக்கும் இடத்திற்கு வாருங்கள், கீதா". புன்னகையுடன் அவனைப் பத்தாவது வரிசைக்கு செல்லுமாறு அந்த விமானப் பணிப்பெண் கூறினால். ஒரே ஓட்டத்தில் அவன் 10வது வரிசையை அடைந்தான். எப்பொழுதும் போல் அழகான நீல நிறச் சேலையில் அங்கு அமர்ந்திருந்தாள் கீதா. அவன் அவள் அருகில் உட்கார்ந்தான். அவளது கையை தனது கையில் எடுத்துக் கொண்டு தான் இப்பொழுதுதான் அதிக சந்தோசமாக இருப்பதாகக் கூறினான்.

"உங்களைவிடச் சந்தோசமாக இருக்கும் இன்னொருவரை எனக்குத் தெரியும்", என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுது அவளது ஆள் காட்டி விரல் அவளையே சுட்டிக்காட்டியது.

"நான் உங்களுடன் பிரயாணம் செய்ய விரும்பினேன். எனது அன்பு பப்பா எனது விமானச் சீட்டை மாற்றிக் கொடுத்தார்", பெருமையுடன் சொன்னால் கீதா. "இன்னும் ௪ மணி நேரம் நமக்கு இருப்பதால் நாம் எல்லாவற்றைப் பற்றியும் பேசலாமே", அவனை ஈர்க்கும் கவர்ச்சியான சிரிப்புடன் கூறினால் அவள். அவள் கையிலிருந்து தனது கையை இழுத்துக் கொண்டான் ராமன். அவள் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டே இருந்தாள்.

"தாஜ்மஹாலை உங்களுக்குப் பிடிக்குமா?" திடீரென்று கேட்டாள் கீதா.

"ஆமாம், அது உலகத்திலுள்ள அதிசயங்களில் ஒன்று. மேலும் புனிதமான காதலின் சின்னமும் கூட", ராமன் பதிலளித்தான்.

"நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஷாஜகான், மும்தாஜ் உயிரோடு இருந்த பொழுதே ஏதாவது நல்லது செய்திருக்கலாம். இந்த அன்பின், காதலின் சின்னத்தை அவள் பார்க்கவேயில்லையே. நான் உயிரோடு இருந்த பொழுதே எனது கணவனிடமிருந்து மிக நல்லதை எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால் இந்த சிறந்த பரிசின் பெருமை எனக்கு எப்படித் தெரியும்", என்றாள் கீதா புன்னகையுடன்.

"இது ஒரு மிகச் சிறந்த எண்ணம். நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்", என்றான் அவன் ஒரு மர்மமான புன்னகையுடன். அவளுடைய பெரிய அழகான கண்களால் அவள் அவனை நோக்கினாள்.

"நிச்சயம்?" கீதா கேட்டாள்.

"100% நிச்சயம். அதிசயங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கின்றன. ஏன் உங்களுக்கு யோகம் இருக்கக்கூடாது", என்றான் அவன் எந்தவித உணர்ச்சியுமில்லாத குரலில். அவள் கண்களை மூடிக்கொண்டு அவன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

"சென்னையில் எங்கு தங்கப் போகிறீர்கள்? எங்களுடைய வீட்டிற்கு வந்து தங்குங்களேன் . மதுரைக்கு விமானம் நாளைக்குத்தானே போகிறது?" கேட்டான் ராமன்.

"நான் உங்கள் வீட்டில் இன்று தங்கப் போவது இல்லை. உங்கள் வீட்டிற்கு வந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் பிறகு எங்காவது ஒரு நல்ல ஹோட்டலில் நாமிருவருமே தங்கலாம்", மிக உறுதியுடன் கூறினாள் கீதா.

"என்ன சொல்கிறீர்கள்?" அவனது குரல் சற்று உயர்ந்தது.

"நீங்கள்தானே கூறினீர்கள் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று. ஒரு கட்டிலில் கூட எந்தவிதமான கேட்ட எண்ணமுமில்லாமல் அடுத்தவருக்குப் பிரச்சினையில்லாமல் படுத்துத் தூங்கலாம் என்று", அமைதியாகக் கூறினாள் கீதா.

"இது லண்டனுமில்லை, பாரீசுமில்லை, இது சென்னை. இங்கு சமுதாயத்தின் கட்டுப்பாடுகளின் படிதான் நடக்க வேண்டும். எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை, ஆனால் உங்களின் பெயரைக் கெடுக்க நான் விரும்பவில்லை", என்றான் ராமன்.

தனது தலையைப் பலமாக அசைத்துக் கொண்டு, "ஆகா, நீங்கள் ஆண்கள், மிகவும் வீரம் பேசுவீர்கள். ஆனால் உண்மையைச் சந்திக்க நேரும் பொழுது கோழைகளைப் போல் பின்வாங்குவீர்கள்", கேலியான புன்னகையுடன் சூடாக வந்தது அவள் பதில்.

அரை மணி நேரத்திற்கு மேல் இதைப் பற்றி அவர்கள் விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். திடீரென்று தலைமை விமானப் பணிபென்னின் குரல் கணீரென்று ஒலித்தது, "இன்னும் 30 நிமிடங்களில் விமானம் சென்னையை அடையும்", என்று அறிவித்தாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, September 7, 2010

"இந்தக் கேள்வியை என்னிடம் 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் இதற்குச் சரியான பதிலை நான் கூறமுடியும்", என்றான் ராமன் ஒரு சிறு சிரிப்புடன்.

"நீங்கள் பேச்சின் சுவாரசியத்தையே கெடுத்துவிட்டீர்கள். மேலும் மற்றவர்களுடன் இவற்றைப் பற்றி பேசும் பொழுதுதான் புதிய எண்ணங்கள் உருவாகும். சொல்லுங்கள், நாம் அதைப் பற்றிப் பேசுவோம்", என்றாள் கீதா.

"பேசுவோம், ஆனால் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்ற பிறகுதான் கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்ற விஷயத்தைப் பற்றி முடிவெடுக்க நான் விரும்புகிறேன்", என்றான் அவன்.

"நீங்கள் ஒரு பெண்ணைக் காதலித்தால் என்ன செய்வீர்கள்?", என்றால் அவள் தனது குறும்பான கண்களுடன்.

"நான் அவளை அன்புடன் சில வருடங்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்வேன். அதற்குச் சம்மதிப்பதோ அல்லது மறுப்பதோ அவளுடைய முடிவு. அவளுக்காகச் சில வருடங்கள் காத்திருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை", என்று பதிலளித்தான் ராமன்.

ஐந்து நிமிடப் பழக்கத்திற்குப் பிறகு பாலியல் உறவைப் பற்றித் தன்னுடன் பேச விரும்பிய பல இளைஞர்களைப் பற்றி அவள் நினைத்தாள். இவன் மற்றவர்களை விட மிகவும் வேறுபட்டவன். இதுதான் என்னைக் காந்தம் போல் அவனிடம் ஈர்க்கிறது. அவனைப் பற்றிய எனது எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியவில்லை. இந்த சிந்தனையுடன் அவள் மௌனமாகி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மறந்துவிட்டால். ராமன் அவளை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஹாலில் காத்துக் கொண்டிருக்கும் அவளது பெற்றோரிடம் போவோம் என்று அவன் கூற, மெதுவாக இருவரும் அவளது அறையிலிருந்து கிளம்பினார்கள்.

அருணாச்சலம் அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். ஆனால் இன்று அவர்களிடமிருந்து மிகக் குறுகிய பதில்களே அவருக்கு கிடைத்தன. தனது மகளின் கையில் அவர் ஒரு கவரைக் கொடுத்தார். அதை அவள் மெதுவாகத் திறந்து பார்த்தாள். அவள் முகத்தில் பளிச்சென்று உண்டான சந்தோசத்தை அவனால் நன்கு பார்க்க முடிந்தது.

"பப்பா மிகவும் நன்றி", என்று கூறி அருணாச்சலத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். "அம்மா, நாம் இப்பொழுது சாப்பிடுவோம். அதன் பிறகு ராமன் அவரது ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கட்டும். நாளை ஒரு மிகவும் கடினமான நாளாக இருக்கும்", என்றாள் கீதா தனது கண்களைச் சிமிட்டிக் கொண்டே. அவளது குரலும் மிக்க மகிழ்ச்சியாக ஒலித்தது. அவன் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாள் அருணாச்சலம் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தார். ஆனால் அதை நாளைக் காலையில்தான் திறந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான் ராமன். இப்பொழுதுதான் நான் முன்பிருந்த ராமனே இல்லை என்று நினைத்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் மேலோட்டமாக சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பார்த்தார்கள். அதிக கவனம் செலுத்தாதற்குக் காரணம் அவர்கள் இருவருமே அவர்களுடைய எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் மூல்கியிருந்ததுதான்.

"உங்களுக்கு அப்பா கொடுத்த கவரில் என்ன இருந்தது?", கீதா கேட்டாள்.

"தொங்கும் கேபின் காரில் வைத்துச் சாப்பிட இரண்டு டிக்கெட்கள் எனது கவரில் இருந்தன", என்றான் அவன் சிரித்த முகத்துடன்.

"உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்", முணுமுணுத்தாள் கீதா.

"உங்கள் கவரில் என்ன இருந்தது?", ராமன் கேட்டான். ஆனால் அவனது கேள்விக்கு அவள் பதிலளிக்கவில்லை. அது தனது ரகசியம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

ராமன் தனக்குக் கிடைத்த கேபின் கார் விருந்தைப் பற்றி மேலும் விவரித்தான்.

"இந்த விருந்து கடலுக்கு 110 மீட்டருக்கு மேல் கேபின் காரில் நடக்கும். ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் உட்கார முடியும்", என்றான் அவன்.

"யார் கண்டார்கள்? நமது கேபினில் இரண்டு மகா வயதானவர்களும் வரலாம்", என்றாள் கீதா நக்கலாக.

ராமனுக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இந்தச் சனிக்கிழமை அவன் கீதாவுடன் விருந்துண்பான், அவளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கிவிடுவான், அவளிடமும் அவளது பெற்றோர்களிடமும் விடை பெற்றுக்கொள்வான் என்று எண்ணினான். அவன் அவளிடம் நிறையச் சொல்ல விரும்பினான். அதற்கான சரியான வார்த்தைகள் அவனுக்கு உதிக்கவில்லை.

இளம் ஜோடிகளுக்கு அன்பான, ஆசையான அந்த உணவு மிகப்பிரமாதமாக இருந்தது. அவர்கள் அந்த ருசியான உணவையும், அவர்களுக்கு கீழே மற்றும் சுற்றிலும் இருந்த அருமையான காட்சிகளைக் கண்டுகளித்தனர். இது அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. அவர்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். அவளை அவன் நேராகப் பார்க்கும் பொழுது அவள் கண்களிலிருந்த அளவில்லா அன்பை அவனால் உணரமுடிந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் கீதா காலியாக இருந்த இடங்களைச் சுட்டிக்காட்டி ஏன் ஒருவரும் இந்த இடங்களுக்கு வரவில்லை என்று சர்வரிடம் கேட்டாள். அவன் தனது தாளைப் பார்த்து விட்டு அதை எடுத்திருந்து அருணாச்சலம் குடும்பம் வரவில்லை என்று தெரிவித்தான். இந்த இன்பமான மாலை நேரத்திற்காக தனது தந்தைக்கு மனதிற்குள் கீதா நன்றியைத் தெரிவித்தாள்.

ராமன் கீதாவை அவள் வீட்டில் இறக்குவிட்டான். அவளது தந்தையோடு தேநீரையும் குடித்தான். மிக மகிழ்ச்சியான கேபின் கார் விருந்திற்குக் கீதாவுடன் வழி செய்ததற்காக அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆனால் அருணாச்சலத்தின் முகத்திலிருந்து அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவனால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இரவு 10 மணிக்கு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தனது அறைக்குத் திரும்பினான் ராமன். தனது அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு முக்கியமான எதையோ இழந்துவிட்டேன் என்று எண்ணினான். கீதா இல்லையே என்று கஷ்டப்படுகிறேனா? அவன் தன்னைத்தானே எரிச்சலுடன் கேட்டுக்கொண்டான்.

"நிச்சயமாக வருத்தப்படுகிறாய்", என்பதுதான் அவனது மனதிடம் இருந்து வந்த பதில். அவனது உணர்ச்சிகள் குழம்பிக்கிடந்தன. கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு எந்தவிதமான முடிவையும் கொடுக்கவில்லை. அவன் சஞ்சலம் அடைந்ததுதான் மிச்சம். பிறகு குளித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Thursday, September 2, 2010

கீதாவும் ராமனும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த சைனா டவுனைக் காரிலேயே சுற்றினார்கள். இந்தத் தனித்தன்மை வாய்ந்த இடத்தைப் பார்த்து அவர்களது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் எதைப் பார்க்கலாம் என்று திட்டம் தீட்ட விரும்பினார்கள். அவர்கள் உணவை அனுபவித்துச் சாப்பிட்டார்கள். ஆனால் அதைவிட அவர்களின் உரையாடல் அவர்களுக்கு அதிக இன்பத்தையளித்தது. அவள் அவனைப் பற்றி எல்லாவற்றையும் அறிய விரும்பினாள். அவளது எல்லா கேள்விகளுக்கும் அவன் பொறுமையாக பதில் கூறினான். சில வேலைகளில் அவளது கேள்விகள் குழந்தைத்தனமாக இருந்தன. ஆனால் பல கேள்விகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்ததையும் மகிழ்ச்சியோடு ரசித்தான்.

அவளிடம் இந்தியர்களின் கூர்மையான அறிவும், ஆழமமான கலாச்சாரமும் குடியிருப்பதாக எண்ணினான். அவன் எழுந்து போக விரும்பியபோது அவள் தனது சந்தோசமான மின்னும் கண்களுடன் கேட்டாள் "ஏன் நாம் இன்னும் உட்கார்ந்து பேச்சைத் தொடரக் கூடாது?".

"நாம் பேசிக்கொண்டேயிருந்தால் உங்களால் எனக்குச் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டவே முடியாது. இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு அவர்கள் நான் இங்கு பார்த்ததைப் பற்றிக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?", அவன் அவளைக் கேட்டான்.

"எனது பெற்றோர்கள் இங்கிருக்கிறார்கள். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்", என்பதே அவளது குறும்பான பதில்.

"எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?", அவள் கேட்டாள்.

"நீங்கள்தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத்தான் இங்கு எல்லாம் தெரியும்", சாந்தமாக அவன் பதில் கூறினான்.

"பிரச்சினையே இல்லை", என்று கூறிய கீதா கடகடவென்று சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

"ஆர்மி மியூசியம், செஸ் ஹோ கப்பல் பயணம், கிலோசோ கோட்டை, குதிரைப் பந்தய மைதானம், லாபிரடோர் ரகசியச் சுரங்கம், மலேய் கிராமம், விளையாட்டுச் சாமான்களுக்கான மினட் மியூசியம், ஆர்சிட் தோட்டங்கள், சிவப்புப் புள்ளி நாகரீக மியூசியம், பலவிதமான சிங்கப்பூரிலுள்ள உல்லாசப் பயணங்கள், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா, பறவைப் பூங்கா, மினி கோல்ப், இரவு சுற்றுப் பயணம், டைகர் டவர், சிங்கப்பூரின் கடலடி பொட்டானிகல் கார்டன், செங்கி மியூசியம், பல்கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்", என்று அவள் அடுக்கிக்கொண்டே போனால்.

எல்லாவற்றையும் ஒழுங்காக பார்க்க வேண்டுமானால் ஒரு மாதம் இங்கு இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

"இரண்டு நாட்களில் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? காரில் நாம் சிங்கப்பூர் முழுவதும் சுற்றுவோம். ஆனால் எங்காவது உட்கார்ந்து நிறையப் பேசுவோம்", என்றாள் கீதா.

அவளது சந்தோசமான கண்கள் நிறையச் செய்திகளைக் கூறுவதாக அவன் எண்ணினான். ஆனால் அவை கூறுவது அவனுக்கு விளங்காததால், புதிராகவே இருந்தது. அவளைச் சந்தித்து இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளே எல்லா முடிவுகளையும் எடுக்கத் தொடங்கி விட்டால் என்று என்னும்பொழுது அவனையுமறியாமலேயே புன்னகையும் வந்தது.

"இதோ பாருங்கள், என்ன வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இங்கு இருக்கும் இரண்டு நாட்களையும் உங்களுக்குப் பரிசளிக்கிறேன்", என்றான் ராமன் ஒரு தாராளப் புன்னகையுடன்.

"உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. எந்தவிதாமான நிபந்தனையும் இல்லாமல் வாக்குக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது", என்று சொன்ன கீதாவின் கண்கள் அவனைப் பயப்படுத்தும் நோக்கத்தோடு இருப்பதைப் போலக்காட்டின.

"இந்த அபாயத்தைத் தெரிந்துதான் நான் அப்படிச் சொன்னேன்", என்று தனது வழக்கமான, கவர்ச்சியான புன்முறுவலுடன் அவளுக்குப் பதிலளித்தான்.

அவன் அவளை விரும்புகிறான் என்ற உணர்ச்சியனால் அவள் மிக மகிழ்ச்சியாக இருந்தாள். காரில் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

என்னுடைய அறைக்குப் போய் எல்லாவற்றையும் பேசலாம். மறந்து விடாதீர்கள், நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும், என்றாள் கீதா பளிச்சென்று.

ஒரு குழந்தையைப் போல் சந்தோசத்தில் மின்னும் அவளுடைய கண்களைக் கவனித்தான். அவன் பதிலளிக்காமல் அவளைப் பின்தொடர்ந்தான். அவளது அரை எல்லா விதத்திலும் முழுமையாக இருந்தது. அங்கு ஒரு இளம்பெண் கனவு காணக்கூடிய, மனதிற்கும் உடம்பிற்கும் மகிழ்ச்சியைத் தரும் எல்லாம் இருந்தன.

"சில நாட்களில் இங்கிருந்து போகப் போகிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் அறையைப் பார்த்தபின் எனக்கு நீங்கள் இங்கு பெரிய மரம் போல ஆழமாக உங்கள் வேர்களைப் பதிப்பது போல் தெரிகிறது", என்றான் ராமன்.

"இது எனது தந்தையின் விருப்பம். நான்தான் எப்பொழுதும் இங்கு வரமுடியும் என்று உங்களிடம் முன்பே கூறிவிட்டேனே", என்று பதிலளித்தாள் கீதா.

"இப்பொழுதுதான் நாம் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம். திருமணத்தைப் பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?", அவள் கேட்டாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Wednesday, September 1, 2010

தனது அறைக்கு சென்றபின் ராமன் இந்த நாளில் நடந்ததைப் பற்றிச் சிந்தித்தான். இந்த நாள் அவன் தனது வாழ்நாளில் இதுவரை அதிகம் கஷ்டப்பட்ட நாள் என்று நினைத்துக் கொண்டான். அதே நேரத்தில் இன்றுதான் தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் முடிவு செய்துகொண்டான். அவனது உதடுகள் கீதா, கீதா என்று முணுமுணுத்தன. முகம் முழுவதும் நிரம்பிய பெரிய புன்னகையுடன் தனது கண்களின் முன்னாள் தெரிந்த அவளுடைய உருவத்தைக் கண்டு ரசித்தான். அவளோடு இருந்த ஒவ்வொரு வினாடியும் அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. கல்லூரியிலிருந்து அவனுக்குப் பல அழகான பெண்களைத் தெரியும். அவர்கள் ஒன்றாகவே படித்தார்கள். மெரீனா கடற்கரைக்கோ அல்லது காப்பி குடிக்கவோ சேர்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் கீதாவைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அடக்க முடியாத உணர்ச்சி எந்தப்பென்னிடமும் அவனுக்கு ஒரு பொழுதும் உண்டானதில்லை. அன்று அவன் எந்தவிதக் கனவுகளும் இல்லாமல் அயர்ந்து நன்றாகத் தூங்கினான்.

கீதாவும் அந்த நாளில் நடந்தவைகளைப் பற்றி நினைத்தாள். இந்த நாள் மாரியம்மன் கொடுத்த பரிசு என்று எண்ணினாள். அதே நேரத்தில் வருங்காலத்தைப் பற்றி எண்ணும் பொழுது அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ராமனின் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்? அல்லது அவனுக்கும் வேறு பெண் பார்த்திருப்பார்களோ? அவளைப் பற்றித் தெரிந்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது போன்ற எண்ணங்கள் அவளுக்குத் தோன்றின. இந்தத் தடவை அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை. வரும் நாட்கள் மகிழ்ச்சியுடையதாகவும், அதிர்ஷ்டமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று வேண்டினாள். இதுதான் இரவு முழுவதும் அவளது சிந்தனையாக இருந்தது. சூரியன் தனது பலமான கதிர்களுடன் உதித்த நேரத்திலும் அவள் விழித்துக் கொண்டுதானிருந்தாள்.

மறுநாள் காலை சரியாக 9 மணிக்கு வந்து BMW காரில் அவளைக் கூட்டிச் சென்றான் ராமன்.

"நீங்கள் பெரிய பணக்காரரா?" வியப்பினால் இன்னும் பெரிதான கண்களுடன் அவள் கேட்டாள்.

"ஒரு கிரடிட் கார்டு இருந்தால் போதும், இது மாதிரி ஒரு காரை ஓட்ட", சிரிப்புடன் பதிலளித்தான் ராமன்.

எல்லா இளைஞர்களைப் போல் அவனும் BMW காரை விரும்பினான். இல்லை, மிகவும் நேசித்தான் என்றே சொல்லவேண்டும். காரில் போகும் பொழுது இந்த 3 நாட்களில் என்னென்ன பார்க்க வேண்டும் என்ற தனது திட்டத்தை கீதா கூறினாள்.

"முதலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகலாம்", அழகான புன்முறுவலுடன் கூறினாள் கீதா.

"கிளி ஜோஸ்யரைத் தேடப் போகிறீர்களா?" அவன் குறும்புடன் அவளைப் பார்த்தான்.

"இல்லை நான் கோவிலுக்குப் போக ஆசைப்படுகிறேன். அதன் பிறகு நாம் லிட்டில் இந்தியாவில் சுற்றி வரலாம். பிறகு சைனா டவுனுக்குப் போகலாம். நிச்சயம் மாரியம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். அது நமது கோவில், எப்பொழுதும் நமது கோவிலாகவே இருக்கும்", என்றாள் கீதா.

அவன் கனவு காணும் அவளது கண்களைக் கவனித்தான். அவளது புத்திசாலித்தனம் நிறைந்த மனதில் இப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்பதை எண்ணி வியந்தான்.

கீதாவும் ராமனும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். நம்பர் 141, செரங்கூன் சாலையில் அமைந்திருந்த இந்தக் கோவில் சிங்கப்பூரிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இது முதன்முதலில் வேலை செய்ய வந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இதுதான் செரங்கூன் பகுதியில் கட்டப்பட்ட முதல் கோவிலாகும். இது அங்குள்ள இந்தியர்களின் சமுதாய மற்றும் கலாச்சார வாழ்வின் மையமாக உள்ளது. இக்கோவிலின் முதல் பெயர் "சுண்ணாம்புக் கம்பம் கோவில்". சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படும் கிராமங்களில் இருக்கும் கோவில் என்பதே இதன் அர்த்தம். எல்லாச் சிலைகளும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை. கீதா மூச்சு விடாமல் ஒவ்வொரு சிலையைப் பற்றியும் அவனுக்கு விளக்கமாகச் சொன்னாள். இந்த இரண்டு வாரத்தில் அவள் எத்தனை தடவை இங்கு வந்திருந்தாள் இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்று எண்ணி வியந்தான். அவர்கள் இங்கு இந்தியாவில் இருப்பதைப் போலவே உள்ள உணர்ச்சியை அனுபவித்தார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுத்தது. அவர்கள் சிங்கப்பூரில் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி உரையாடினார்கள். கீதா தென்னிந்திய இனிப்பு சாப்பிட விரும்பியதால் அவர்கள் லிட்டில் இந்தியாவில் அதையும் அனுபவித்தார்கள்.

அதன் பிறகு அவர்கள் சைனா டவுனுக்கு வந்தார்கள். அங்கு அவள் மாரியம்மன் கோவிலைத் திரும்பவும் பார்க்க விரும்பினாள். ஒரு வேலை ராமன் தனக்கு கணவனாக அமைந்தால் முதலில் இந்தக் கோவிலுக்குத்தான் அவனுடன் வரவேண்டும் என்று நினைத்தாள். அவளது முகம் சிவந்தது. எப்பொழுதும் போல அவன் அவளது அழகான முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது வாயிலிருந்து எந்த விதமான விமர்சனமும் வரவில்லை. அவன் அவளை மிகவும் ரசித்துக்கொண்டிருந்தான் என்று சொல்வதே இங்கு மிகப்பொருத்தமாகும்.

இங்கு கீதாவைச் சந்தித்தேன். அடிக்கடி நாங்கள் இங்கு வர வேண்டும் என்பதே அவன் மனதில் ஓடிய எண்ணங்கள். இந்தக் கோவிலிலும் அவள் எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கிக் கூறினாள். சிறு குழந்தையிலிருந்தே அவள் இங்கு வளர்ந்தவளைப் போல எல்லாமே தெரிந்திருக்கிறதே என்று வியப்புடன் பெருமையும் அடைந்தான் ராமன். பெண்கள்தான் ஆண்களை விட கடவுளுக்குப் பக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணினான் அல்லது தங்கள் கணவனிடமிருந்து, குடும்பத்திடமிருந்து மற்றும் சமூகத்திலிருந்து தற்காலிகமாகத் தப்புவதற்கான இடம் கோவில்தானோ என்றும் எண்ணினான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8