மூணாரில் பிறந்து சாத்தூரைச் சேர்ந்த நான், சென்னை, மதுரை மற்றும் விருதுநகரில் படித்தேன். எனது தமிழ் மதுரை தியாகராஜர் கல்லூரியைச் சார்ந்தது. எனது வயதில் உள்ளவர்களுக்கு 1965 தமிழ் மொழிப் போராட்டத்தைப் பற்றி நினைவிருக்கும். உலகில் ஒருவரோடு ஒருவர் புரிந்து கொள்ள மொழிகள் அவசியம். ஆகையால் எனக்குத் தெரிந்த மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் தமிழில் இங்கு எழுதுகிறேன்.

படித்து முடித்தவுடன் 2 ஆண்டுகள் மீன்வளத்துறையில், நாகபட்டினத்தில், உதவி ஆராய்ச்சியாளராக வேலை பார்த்தேன். அதன்பிறகு ஜெர்மனி. வருடங்கள் வேகமாக ஓடி விட்டன.

எனக்குக் கிடைத்த அறிவை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள், பதிலளிக்கிறேன்.

நன்றி

டாக்டர். க. பத்மநாபன்