நூதனமாகக் காத்திருப்பதை விட அவளுக்கு வேறு வழியில்லை. அவளுக்குத் தனது நகங்களால் அவனது முகத்தில் பிரான்டலாம் போலிருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவனைக் காயப்படுத்த அவள் விரும்பவில்லை. அவனது அழகான முகத்தை எப்படி பிராண்டமுடியும் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். ராமன் முதலில் பாம்பனுக்குப் போய்விட்டு இறுதியாக ராமேஸ்வரம் கோவிலுக்கு டிரைவரைக் காரை ஓட்டச் சொன்னான். கார் எதுவரை போகமுடியுமோ அது வரை அவர்கள் சென்றார்கள்.

அங்கு ஏறக்குறைய ஒன்றுமேயில்லை. இந்தக் காடுகளை நன்றாக அடர்த்தியாக்கலாம். இன்னும் பல காரியங்களை இங்கு செய்யலாம் என்று அவன் எண்ணினான். இந்த இடங்களுக்கெல்லாம் ராமர் தீவின் பகுதியாக ஆவதற்கு நல்ல தகுதி இருக்கிறது என்று எண்ணினான். இதை அவன் கீஎதாவுக்கு அர்ப்பநித்திருப்பதையும் நினைவு கொண்டான் ராமன். இந்தச் செய்தியை ராமேஸ்வரத்தில் வைத்து அவளிடம் சொல்ல அவன் விரும்பவில்லை. மதுரையில் வைத்துத்தான் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தான். "நான் ரயில்வே ஸ்டேசனுக்குப் போவதற்கு முன்னாள் அவளிடம் சொல்வேன்", என்று நினைத்தான்.

"உங்களுக்கு எல்லாமே தெரியும் போலிருக்கிறதே. ராமேஸ்வரத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்", கீதா ராமனைக் கேட்டாள்.

அவன் அவளை இனிமையான புன்முறுவலுடன் பார்த்தான்.

"ராமேஸ்வரத்தில்தான் ராமர் தனது மனைவி சீதையை இலங்கையின் இராவணனிடமிருந்து காப்பாற்ற கடலுக்கு மேல் பாலத்தைக் கட்டினார். இங்குதான் ராமன் சிவனைத் தொழுது இராவணனைக் கொன்ற பாவத்தையும் கழுவிப் போக்கினார். எல்லா இந்துக்களும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகிறார்கள். இதை தென்னகத்தின் வாரணாசி என்று கூறுகிறார்கள். வாரணாசிக்கு புண்ணிய யாத்திரைக்குப் போய்விட்டு ராமேஸ்வரத்திற்குப் போகாவிட்டால் இந்தப் புண்ணிய யாத்திரை முழுமையானது ஆகாது", ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்தான் ராமன்.

"மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் கீழ்ப்பகுதியில் இருப்பதுதான் ராமேஸ்வரம் என்னும் தீவு", என்றான் ராமன்.

ராமனுடைய ஆழமான அறிவைக் கண்டு வியந்தாள், பெருமைப்பட்டாள் கீதா. ஆனால் அவளுக்கும் அவனை புகழ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை.

"நீ என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?" ராமன் கேட்டான்.

"இல்லை, நீங்கள்தான் நேற்று இரவு கனவு கண்டு கொண்டிருந்தீர்கள் என்று நான் எண்ணினேன். ஐந்து மணி நேரங்கள் நான் உங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்", பதிலளித்தாள் கீதா.

"அப்படியா?" என்றான் ராமன்.

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

"இங்குள்ள கடவுளைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றாள் கீதா.

திரும்பவும் அவன் அவளைப் பார்த்து அழகாக சிரித்தான்.

"இங்குள்ள முக்கியக் கடவுள் ரங்கநாதரின் லிங்கம்தான். இது இந்தியாவிலுள்ள முக்கியமான 12 லிங்கங்களில் ஒன்று", விளக்கினான் ராமன்.

"மிகவும் அற்புதம். நீங்கள் என்னிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டால் உடனே உங்களைத் திருமணம் செய்துகொள்வேன்", என்றாள் கீதா.

அவளது முகம் சிவந்தது. தனது முகத்தை அவன் பார்க்காமலிருக்க அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவன் அதற்குப் பதில் கூறுமுன் ராமேஸ்வரம் கோவில் வந்துவிட்டது.

புதுக்கொபுரம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமானதாக இருந்தது. இந்தியாவிலுள்ள எல்லா மக்களையும் அங்கு காண முடிந்தது. எல்லோரும் தாங்கள் செய்யும் வேலைகளில் கோவிலைப் பார்ப்பது, புனித நீராடுதல் மற்றும் பூஜை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய கனவு நகரம் இங்குதான் உருவாகி இந்தியாவை எல்லா வகைகளிலும் மேலும் பலப்படுத்தும் என்று எண்ணினான் ராமன். உலகப்படத்தில் இதற்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்படும். எல்லோரும் இங்கு வர விரும்புவார்கள். இந்தியாவின் வருங்கால ராமர்தீவைப் பற்றி நினைக்க நினைக்க ராமன் மிகவும் பெருமையடைந்தான்.

கீதாவின் குரலை கேட்டவுடன்தான் தனது நினைவுகளிலிருந்து வெளியே வந்தான் ராமன்.

"நீங்கள் இப்படி நின்று கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களையும் ராமேஸ்வரத்திலுள்ள ஒரு கடவுள் என்று நினைக்கப்போகிறார்கள்", என்றாள் கீதா.

இனிமையான சிரிப்புடன், "நாம் இப்பொழுது கோவிலுக்குள் போவோமா?" அவனைப் பார்த்துக் கேட்டாள் கீதா.

ராமன் அவளை முழித்துப் பார்த்தான். "கோவிலுக்குள் நாம் போக வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. நாம் ஊருக்குத் திரும்பிப் போவோம். இன்னொரு தடவை நமது வாழ்வில் நிச்சயம் இங்கு வருவோம். அப்பொழுது நீ கோவிலுக்குள் போகலாம்", என்றான் ராமன்.

அவனது குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று கீதா எண்ணினாள். ஆனால் அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விபரங்களைத் தெரிந்து கொள்ள மறுநாள் வரை காத்திருக்க அவள் முடிவு செய்தாள்.

"கடந்த நாட்களில்தான் நான் அவனை நன்றாக புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றே முடிவு செய்திருப்பேன்", கீதா நினைத்தாள். அவன் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பயங்கரப் பசி. அவர்கள் எங்காவது சாப்பிடுவது என்று முடிவு செய்தார்கள்.

இரவு 10 மணிக்கு அவர்கள் மதுரை திரும்பினார்கள். பாட்டியும் அவர்களைத் திரும்பவும் சந்தோசமாக வரவேற்றாள். அவர்கள் பாட்டியின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். அவன் விருந்தினரின் அறைக்குள் நுழைந்த பொழுது இரவு மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. படுக்கையில் படுத்தபடியே அவன் கடந்த ஏழு, எட்டு நாட்களைப் பற்றி எண்ணினான். இனிமேல் தனது வாழ்க்கை முன்பிருந்ததைப் போலிருக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் கீதாவை மணக்க, தான் ஒரு செத்த எலியைக் கூட விழுங்கத் தயங்கப் போவதில்லை என்று முடிவு செய்தான். அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவளுடன் என்ன, எப்பொழுது, எப்படிச் சொல்வது என்பதே அவனது தீர்க்கமுடியாத பெரிய பிரச்சினையாக இப்பொழுது இருந்தது. எந்தவிதக் கனவுமில்லாமல் அன்று அவன் நன்றாகத் தூங்கினான்.

"நாளை எனது வாழ்வில் ஒரு முக்கியமான நாள். அவன் என்னைக் காதலிக்கிறான். ஆனால் அவன் சொல்ல வெட்கப்படுகிறான்", நினைத்தாள் கீதா. அவளது அறையில் அவளுக்கு மறுநாள் வரை காத்திருக்கப் பொறுமையில்லை. இந்த இரவிலும் அவளுக்கு அதிக நிம்மதியில்லை. ராமன் வாயைத் திறக்காவிட்டால் நானே அவனிடம் சொல்வேன் என்று நினைத்தாள் கீதா. இந்தச் சிந்தனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளும் தூங்கினாள். அப்பொழுது நேரம் காலை 4 மணி.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8