ஒரு நல்ல, வெப்பமான காலையில் ராமன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கிளம்பினான். விமானத்தில் அவனை மளந்த முகத்துடனும் வரவேற்ற விமான பணிப்பெண், சிங்கப்பூர் இளைஞர்களுக்கு நல்ல இடம் என்றும் அங்கு அவனுக்கும் பலவித ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்றும் புன்முறுவலுடன் கூறினாள். அவனும் அது என்ன ஆச்சரியமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அவளை நோக்கி சிரித்தான். அவன் மனம் கீழ்க்கண்டவாறு எண்ணத் தொடங்கியது. "தமிழ் நாட்டை விட நிறைய வித்தியாசமாக இருக்கும், மிகவும் சுத்தமாக இருக்கும்." எல்லாமே மிகுந்த கட்டுப்பாடாக இருக்கும். அரசாங்கம் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவெடுக்கும். இதற்கு மேல் இன்னும் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவன் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தன. சிங்கப்பூர் மக்களால் உருவாக்கப்பட்டு அங்கு பேசப்படும் சிங்கலிஷ் [சிங்கப்பூர் பாஷை + ஆங்கிலம்] பற்றி நினைத்தவுடன் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

விமானப் பயணத்தை ராமன் ரசித்தான். விமானத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்களும் இருந்தார்கள். அவனுக்கு குடிபானங்கள், சாப்பாடு இவற்றைக் கொடுத்த விமான பணிப்பெண்கள் அவனிடம் மிகவும் அன்பாக பேசினார்கள். ஆனால் அவன் மனம் இன்னும் சிங்கப்பூரிலேயே இருந்தது. அங்கு என்ன நடக்கும், நடக்கலாம் என்ற நூதனமான எண்ணங்கள் அவனது தலையில் ஓடிக்கொண்டிருந்தன. அவன் சிங்கப்பூரைத் தனியாகவே சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தான். அப்பொழுதுதான் தனக்கும் பிடித்த இடத்தில் அதிக நேரம் இருக்கலாம், மற்ற இடங்களுக்கு போகாமலேயே இருக்கலாம் என்று எண்ணினான். இந்த 21வது இளம் வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி எந்தவித முடிவும் இப்போது எடுக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேலை செய்வதுதான் நல்லது என்ற தன முடிவைப் பற்றி எண்ணினான். அதற்கு ஊன்றுகோலாக இருந்த தன் மாமாவின் அறிய வார்த்தைகள் அவனது நினைவிற்கு வந்தன. "வாடா அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் உன்னால் அதிக பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நீ கொடுக்கும் விலை இந்தியாவிலுள்ள சமூக, குடும்ப வாழ்க்கையை இழப்பதுதான். உதாரணமாக இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் பொழுது ஐரோப்பாவில் வேலை செய்ய வேண்டியது இருக்கும். குடும்பத்திலுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களுக்கும் கூட நினைத்தவுடன் ஊர் செல்லவும் முடியாது. இள வயதில் யாரும் இதைப் பற்றி அதிகம் நினைப்பதில்லை, ஆனால் வயதாக வயதாக அதனால் மிகவும் மன வருத்தப்பட நேரும். இந்த அறிவுரைகள்தான் அவன் இந்தியாவில் வேலை செய்து வாழ விரும்புவதின் முக்கிய காரணமாகும். ஒரு வருடம் வேலை பார்த்து விட்டு முதுநிலைக் கல்விக்குச் சென்று அதன் பிறகு ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுவதே அவனது குறிக்கோள். இந்த எண்ணங்களெல்லாம் பிரயாணத்தின் பொது அவனது மனதில் ஓடியது. நேரம் போனதே தெரியவில்லை. விமானம் சிங்கப்பூரை அடைந்தது.

சிங்கப்பூர் விமான நிலையம் மிகவும் சுறுசுறுப்பாக ஆனால் பரபரப்பாக இருந்ததது. ராமன் ஒரு அழகான இளைஞன். எல்லாருமே அவனிடம் அன்புடன் இருந்தார்கள். விமான நிலையத்தின் பிரயான விதிமுறைகளை முடித்து அவன் வெளியே வந்தான். ஒரு டாக்சியை பிடித்து தனது ஹோட்டலை அடைந்தான். அது ஒரு நல்ல வசதியான ஹோட்டல். ரிசப்ஷனில் இருந்த கவர்ச்சியான பெண் அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள். அவனுக்கு எந்த உதவியையும் செய்யத் தயார் என்று கூற, அவனும் புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்வதாகத் தலையை அசைத்தான். தனது அறையின் சாவியைப் பெற்றுக்கொண்டு, தன் அறையை அடைந்தான். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, குளித்து விட்டு லிட்டில் இந்தியாவை பார்க்க அவன் விரும்பினான்.

லிட்டில் இந்தியா தமிழ் நாட்டைப் போலவே இருந்தது. எங்கும் மிகவும் சுத்தமாகவும், பலவித நிறங்களைக் கொண்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரின் சுத்தத்தைப் பற்றி அவன் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அதை அனுபவிப்பது அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. தான் நடப்பதால் தரையும், சாலையும் அழுக்காகிவிடுமோ என்று நடக்கக் கூட தயங்கினான். இது வேறு உலகம். ஆனால் ஐரோப்பாவோடு ஒப்பிடும்போது இங்கு வெப்பம் அதிகம் என்பதை நேரிலேயே தெரிந்து கொண்டான். ரேஸ் கோர்ஸ் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஏதாவது சாப்பிட்டால் நல்லது என்று நினைத்தான். பனானா லீப் ஜேகியில் தேநீர் குடித்து விட்டு தமிழ்நாட்டுப் பலகாரங்களையும் சுவைத்தான். பக்கத்துச் சாலையின் வழியாக சென்று செரங்கூன் சாலையை அடைந்தான் ராமன். வீரமாகாளியம்மனின் கோவிலைப் பார்த்தபொழுது தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோவிலின் முன்பு நிற்பது போன்ற உணர்ச்சியே அவனது மனதில் நிறைந்தது. அது மிகவும் புழுக்கமான, வெப்பமான நாளாக இருந்ததால் அடுத்த நாள் அந்தக் கோவிலுக்குள் சென்று பார்க்கலாம் என்று தீர்மானித்தான்.

மாலை நாலரை மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல ராமன் முடிவு செய்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் மக்கள் அதிகமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சைனாக்காரர்கள், மலேயர்கள், தமிழர்கள் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்க வந்த பல வெளி நாட்டவர் அங்கு இருப்பதைப் பார்த்து வியந்தான். எல்லாருடைய முகமும் மலர்ச்சியாக இருந்தது. அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினான். சில கணங்கள் தனது வருங்காலத்தைப் பற்றியும் எண்ணினான். அவனது கண்களுக்கு முன் பல நிறங்களைக் கொண்ட படம் தோன்றியது. அந்தப்படத்தில் பல அழகிய நிறங்கள் இருந்தாலும் அதனுள் எந்த உருவத்தையும் அவனால் காணமுடியவில்லை. அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அவனைக் கடந்து சென்ற ஒரு இளம் சைனாக்காரி அவனை விநோதமாகப் பார்த்தால். 191 செ.மீ. உயரமுள்ள, பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ராமன் தனது வசீகரக் கவர்ச்சியைத் தனது வீட்டில் எங்கும் காட்டியதில்லை. மின்சார ரயிலைப் பிடித்துத் தனது ஹோட்டலையடைந்தான். ஹோட்டலில் ரிசப்சனுக்கு அருகில் பலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அங்கு உட்கார்ந்து அவர்களோடு உரையாட அவனுக்கு விருப்பமில்லாததால் தனது அறைக்குச் சென்றான். அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் இந்திய மற்றும் தமிழ்ச் சேனல்களும் வந்தன. அவனது வீட்டிலேயே இருப்பது போல் உணர்ச்சி அவனுக்கு உண்டானது. பெற்றோருக்குப் போன் பண்ணி விட்டு விளக்கையும் அணைத்துவிட்டு உடனேயே நித்திரையில் ஆழ்ந்தான்.

தூக்கத்தில் ராமன் ஒரு கனவு கண்டான். அழகான பளிச்சென்றிருந்த நிறங்களுக்கு நடுவில் ஒரு முகத்தைக் கண்டதாக எண்ணினான். ஆனால் அந்த முகம் தெளிவாக இல்லை. அவனுக்கு எதுவுமே நன்றாக நினைவில் இல்லை. கடைசியில் ஆழ்ந்து தூங்கினான். அவன் கண் விழித்த பொழுது வெளியில் சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அது அவனை ஒரு மறக்க முடியாத துணிகரச் செயலுக்கு இழுப்பதைப் போலிருந்தது. இந்த இளைஞனுக்கு என்ன நடக்கப் போகிறது? எவருக்கும், எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியாது. அதுதானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அவன் எழுந்து பால்கனியின் கதவைத் திறந்தான். சூரிய வெளிச்சத்தினுடன் வழியிலிருந்து வந்த சுத்தமான காற்றை அனுபவித்தான்.

சிங்கப்பூரில் எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் சமாதானமாக, நன்றாக வாழ்வதைப் பற்றி சந்தோசப்பட்டான். இந்தியாவில் உள்ள ஜாதி, இன, மதப் பிரச்சினைகளைப் பார்க்கும் போது சிங்கபூர் ஒரு கனவுலகம் என்று எண்ணினான். ஆனால் இந்தியாவிலுள்ள பல நல்ல விஷயங்களையும் அவன் மறக்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மற்ற மாநிலத்தோரை விரோதிகள் போல நினைப்பதும், நடத்துவதும், தண்ணீர் மற்றும் இயற்கை வளங்களுக்காக நடக்கும் தகராறுகளும் அவன் மனதைப் புண்படுத்தியது. ஏன் இந்தியாவிலும் ஒரு சிங்கப்பூர் உருவாகக்கூடாது என்று எண்ணினான். இந்தியக் கலாச்சாரத்திலும் அரசியலிலும் அவனுக்கு மிக ஆர்வம் இருந்ததால் அவனது மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றின.

ஹோட்டலில் வரவேற்பு முகப்பில் இருந்த இளம் பெண் அவன் அங்கு வந்தபோது முகம் முழுவதுமான சிரிப்புடன் காலை வணக்கத்தைத் தெரிவித்தாள்.

"இன்று நீங்கள் என்ன பார்க்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"லிட்டில் இந்தியாவிலுள்ள கோவிலைப் பார்க்கப்போகிறேன்," என்றான் ராமன்.

"அது நல்லது, ஆனால் முதலில் சைனா டவுனிலுள்ள மாரியம்மன் கோவிலைப் பாருங்கள். ஏனெனில் அதுதான் சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் கோவில்", என்றால் அந்த இளம் பெண்.

அவள் அவனுக்கு சிங்கப்பூரில் பார்க்கவேண்டிய இடங்களைப் பற்றியும், சரித்திரத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள சிறு புத்தகங்களை படிக்கவும் விரும்பினான். காலையில் ஒன்பதரை மணிக்கு அவன் ஹோட்டலை விட்டு வெளியேறினான்.

ராமன் லிட்டில் இந்தியாவை அடைந்தவுடன் மசாலாவின் நல்ல மனமும், பிச்சிப்பூவின் மணமும் அவனை வரவேற்றன. தங்க நகைகள், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள், பொருட்கள், அழகான பலவித கண்களை கவரும் சேலைகள் அவனுக்கு சென்னையின் தி.நகரையே ஞாபகத்திற்குக் கொண்டு வந்தன. தன்னைச் சுற்றியுள்ள பொருட்களையும் மனிதர்களையும் அவன் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தான். லிட்டில் இந்தியாதான் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் முக்கியமான இடம். மிகப்பெரிய தெக்கா மையம் மற்றும் லிட்டில் இந்தியா ஆர்கேடிலிருந்து சின்னச் சின்ன மளிகைக் கடைகள் வரை ஒரு இடம் காளியில்லாமல் கடைகள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு கடையிலும் எல்லா நிறங்களிலும் பலவிதப் பொருட்கள் விற்கப்பட்டன. விருப்பம் உள்ளவர்கள் மணிக்கணக்கில் அங்கு தங்களுடைய நேரத்தை செலவழிக்கலாம்.

கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறித்தவ தேவாலயங்கள் மிகவும் அருகிலேயே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். இது ஒரு மதச்சார்பில்லாத நாடு என்று என்னும் பொழுது இந்தியாவிலுள்ள நிலைமையும் அவன் கண்கள் முன் ஓடியது. இந்த எண்ணங்களுடன் அவன் வீரமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். திடீரென்று ஒருவர் அவனை அழைத்தார்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8