அவர் ஒரு கிளி ஜோஸ்யர். அவர் அவனைப் பார்த்துக் குழந்தை போலச் சிரித்தார்.

"இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை எனது கிளியிடமிருந்து தெரிந்து கொள்கிறீர்களா?" என்று கேட்டார்.

இதுவரை ராமன் கிளி ஜோஸ்யம் பார்த்ததில்லை. அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அவனும் அதற்குச் சம்மதித்தான். ஒருவேளை லிட்டில் இந்தியாவின் நல்ல சூழ்நிலைதான் தன்னை சம்மதிக்க வைத்ததோ என்று எண்ணினான். கிளி ஜோஸ்யர் தனது சீட்டுக்களைக் கலைத்தார். தனது கிளியிடம் ஏதோ முணுமுணுத்தார். தானியங்களைப் பெற்ற கிளி, சீட்டைத் தேட ஆரம்பித்தது. "கிளி அளவில்லாமல் அதிக நேரம் சீட்டைத் தேடுகிறது", என்று பொறுமையில்லாமல் நினைத்தான் ராமன். ஏன் இவ்வளவு அவசரம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

இறுதியாக கிளி ஜோஸ்யரின் குரல் ராமனின் கவனத்தை ஈர்த்தது.

"நீங்கள் இங்கு உங்கள் அதிர்ஷ்டத்தை சந்திக்கத்தான் வந்திருக்கிறீர்கள்", சிரித்த முகத்துடன் கிளி ஜோஸ்யர் கூறினார்.

"எனது அதிர்ஷ்டம், என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?" ராமன் கேட்டான்.

"நீங்கள் சிங்கப்பூருக்கு உங்கள் வாழ்க்கை துணைவியைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் என்று எனது கிளி கூறுகிறது," என்பதுதான் கிளி ஜோஸ்யரின் பதில்.

ராமன் பலமாக சிரித்தான். தான் இன்னும் தனது வாழ்வில் காதல், திருமணம், குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி எண்ணிப் பார்த்ததில்லை என்றும் கூறினான். பளபளக்கும் கண்களுடன் கிளி ஜோஸ்யர் தான் சொல்வது உண்மை என்று கூறினார்.

"பொதுவாக யார் இதைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் காத்திருக்கிறது", பதிலளித்தார் கிளி ஜோஸ்யர்.

"இப்படிச் சொல்லித்தான் நீங்கள் உங்கள் பணத்தைச் சம்பாதிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் அவளை நான் எங்கு சந்திப்பேன் என்று சொல்ல முடியுமா?" புன்முறுவலுடன் ராமன் கேட்டான்.

அவரின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் அவனால் காண முடியவில்லை. தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். கிளியையும் அது எடுத்த சீட்டையும் திரும்பத் திரும்பப் பார்த்தார். இரண்டு நிமிடங்கள் மெளனமாக இருந்தார். ராமன் அங்கிருந்து போகக் கிளம்பினான். கிளி ஜோஸ்யரின் கணீரென்ற குரல் அவனை தடுத்து நிறுத்தியது. "சைனா டவுனிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் அவளைச் சந்திப்பீர்கள். நான் உங்களுக்கு இன்னொரு ஆலோசனையையும் சொல்ல விரும்புகிறேன்" என்றார் அவர். ராமன் அவரை ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்தான்.

"இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாதீர்கள்", என்பதுதான் கிளி ஜோஸ்யரின் கடைசி வார்த்தைகள்.

"நடந்ததெல்லாம் ஒரு கனவா?", ராமன் எண்ணினான். இதை அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு அழகான பெண்ணை எந்தவிதமான கேட்ட நோக்கமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்க்க அவனுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அவனுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு பெண்ணை மனதில் கூட கெடுக்கக்கூடாது என்பது அவனது அழுத்தமான ஒழுக்க முறைபாடு. இப்பொழுது ஒரு பெண்ணை எப்படி மற்ற எண்ணத்தோடு பார்ப்பது என்பதை நினைத்து சஞ்சலமடைந்தான். ஆனால் சைனா டவுனுக்குச் சென்று மாரியம்மன் கோவிலைப் பார்க்குமாறு ஒரு குரல் அவனுக்குள்ளிருந்து கூறியது. மாரியம்மன் அவனுக்கு என்ன முடிவு செய்திருக்கிறாள் என்பதை அறிய ஆர்வமாக இருந்தான்.

மின்சார ரயில் மூலமாக சைனா டவுனை அடைந்தான். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அதைப்பற்றிய விபரங்களை வாசிக்க ஆரம்பித்தான். சைனா டவுனின் சரித்திரம் 1821ம் வருடம் ஆரம்பித்தது. சைனாவிலுள்ள "சியாமென்", "ப்யூஷியன்" மாகானத்திலிருந்து சைனாக்காரர்கள் இங்கு முதன் முதலாக வந்த பொது தொடங்கிய கதை இது. வந்தவர்கள் எல்லாம் ஆண்கள். இவர்கள் சிங்கப்பூர் நதியின் தெற்குப் பக்கத்தில் தங்கினார்கள். இன்று இந்த இடம் டெலோக் அயர் என்று அழைக்கப்படுகிறது. சைனா டவுனின் முதல் பெயர் "ந்யுசேஷ்யுயி". இதன் அர்த்தம் காலை மாட்டு வண்டித்தண்ணீர். இந்த பெயருக்குக் காரணம் அப்பொழுது "அன்சியாங்" மலையிலிருந்து அல்லது ஸ்ப்ரிங்க்ஸ் தெருவிலிருந்து கொண்டு வந்ததால்தான். ராமன் தனது கண்களை மூடினான். அவனது கண் முன்னால் அங்கு 1821ல் நடந்த காரியங்கள் படம் போல ஓடின. அவன் மேலும் சைனா தானைப் பற்றி வாசிக்க ஆரம்பித்தான்.

சைனா டவுனில் சைனக்காரர்களைத் தவிர வேறு இனத்தவரும் வாழ்கிறார்கள். எல்லோரும் இப்படி எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்வதுதான் சிங்கப்பூரில் அவனை மிகவும் கவர்ந்த விஷயம். தென் பாலச் சாலையில் உள்ள "ஜமே மசூதியும்", "மாரியம்மன் கோவிலுமே" அல்லது டெலோக் அயரிலிருந்த "அல் அப்ரர் மசூதியுமே" இதற்கான அழகான உதாரங்கலாகும். இது சைனா டவுனின் ஒற்றுமையான மதம் மற்றும் இனத்தின் கூட்டு வாழ்விற்கான சாட்சிகளாகும். சிங்கப்பூர் முழுவதுமே இதைப் போலத்தான் இருக்கிறது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான். ஒரு சைனாக்காரனின் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறித் தென் பாலச் சாலையை அடைந்தான்.

தென் பாலச் சாலை, கதவு என் 244. மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக ராமன் பல நிமிடங்கள் மெளனமாக நின்றான். சிங்கப்பூரின் இந்தப் பழமையான கோவில் திராவிட நாகரீக அலங்காரத்தில் கட்டப்பட்டிருந்தது. இது சைனா டவுனின் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. ராமன் தமிழ்நாட்டில் பல கோபுரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். மாரியம்மன் கோவில் வாசலிலிருந்த கம்பீரமான கோபுரத்தைக் காண மிகவும் பெருமையடைந்தான். இந்தக் கோபுரம் ஆறு அடுக்குகளாக கட்டப்பட்டிருந்தது. இவை கடவுள்களின் சிலைகள், மதப் புராணக்கதைகள், கலாச்சாரத்தையோட்டிய சிலைகளால் வியக்கத்தக்க வகையில் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவிலுக்குள் நுழைந்த பொழுது வலது பக்கத்திலிருந்த முருகக் கடவுள் அவனைக் கவர்ந்தார். இடது பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் கிருஷ்ண பகவான். இது அவனது உடம்பிற்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் மின்சாரம் பாய்வதைப் விரைவான, அதிகமான சக்தியைக் கொடுப்பதை அவன் உணர்ந்தான். அதை அனுபவிக்கும் பொழுது அவனது மனம் அளவில்லாத மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது. பல நிறங்களைக் கொண்ட கோபுரம் அவனது கற்பனைகளைத் தூண்டிவிட்டது. ஒரு நீல நிறச் சேலையை அணிந்த பெண்ணைச் சந்திக்கப் போவதாக அவனது மனம் நினைத்துக் கொண்டது. அவனது கற்பனையில் அந்தப் பெண்ணின் முகத்தையும் உருவத்தையும் சித்தரிக்க முயன்றான். ஆனால் அதைப் பற்றி அவனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. "அவள் இங்கு எங்காவது இருக்கிறாளா?" என்று எண்ணினான். அதே நேரத்தில் தான் அப்படி ஒரு நீலச் சேலை அணிந்த பெண் இருப்பதை நம்புவதை நினைத்துத் தன்னைத் தானே மிகவும் கடிந்து கொண்டான்.

நேரம் மதியம் ஒரு மணியைக் கடந்துவிட்டது. ராமனுக்குப் பசிக்கவில்லை. அவன் அந்த தெரியாத நீல நிறச் சேலையணிந்த பெண்ணிற்காகக் காத்திருப்பதாக முடிவு செய்தான். மாலை மணி ஐந்தாக இன்னும் சில நிமிடங்களே இருந்தன. அப்பொழுது நீல நிறச் சேலையணிந்த ஒரு பெண் கோவிலுக்குள் வருவதைக் கவனித்தான். அவன் நின்ற இடத்திலிருந்து அவளது முகத்தை அவனால் காண முடியவில்லை. அவளைப் பின் தொடர்வதாக முடிவு செய்தான். கோவிலில் அதிகக் கூட்டம் இருந்தது. மூன்று மீட்டர் தூரத்தில்தான் அவள் இருந்தாலும், அதிகமான கூட்டத்தினால் அவனால் அவளை நெருங்க முடியவில்லை. அவளது மென்மையான நடையையும் கம்பீரமான அசைவுகளையும் கண்டு வியந்தான் ராமன். திடீரென்று முதுகில் ஏதோ அழுத்துகிறது போன்ற எண்ணத்தில் அவள் திரும்பிப் பார்த்தாள். இந்தச் சில நொடிகளில் அவனது கண்கள் அவளைப் படம் பிடித்துக்கொண்டன. அவள் முகம் மிக அழகாக இருந்தது. ஆனால் அவளது கண்களில் சோகம் இருப்பதாக அவன் எண்ணினான். இந்த எண்ணங்களுடன் அவளை தொடர விரும்பினான். ஆனால் அவளைக் காணவில்லை. அவன் மிகவும் சஞ்சலமடைந்தான். அவளை எல்லா இடங்களிலும் தேடினான். ஆனால் அவள் காற்றில் மறைந்தது போல் காணாமலேயே போய்விட்டாள். அவனுக்குண்டான குழப்பத்தில் நீல நிறச் சேலையை அணிந்து ஒரு பெண்ணைப் பார்த்தோமா, இல்லையா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. மனக் கலக்கத்துடன் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தான். சாப்பிடக்கூட மனமேயில்லை. அவனால் தூங்கவும் முடியவில்லை. நீண்ட இரவு. மறுநாள் காலையில் லிட்டில் இந்தியாவிற்கு சென்று கிளி ஜோஷ்யரைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8