"என் பெயர் ராமன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். வேலையில் சேர்வதற்கு முன்பு ஒரு வாரம் இங்கு உல்லாசப் பயணத்திற்கு வந்திருக்கிறேன். இது ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்கில் இருக்கும் எனது மாமா கொடுத்த பரிசு. கூட்டத்தோடு இங்கு வருவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆகையால் நான் தனியாக வந்தேன்." ராமன் பதிலளித்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. ஏன் எனக்காகக் காத்திருந்தீர்கள் என்று சொல்லாவிட்டால் நான் எழுந்து போய்விடுவேன்," அவளது குரல் உறுதியாக ஒலித்தது.

"நான் அதற்கான காரணத்தைச் சொன்னால் நீங்கள் என்னை நிச்சயம் பைத்தியம் பிடித்தவன் என்றுதான் நினைப்பீர்கள்", ராமன் கூறினான்.

"உங்களுக்கு பைத்தியமோ இல்லையோ, அது என் பிரச்சினையில்லை. ஆனால் அந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நான் இப்பொழுதே சென்று விடுகிறேன்". இதை சொல்லிவிட்டு அவள் போவதற்காக எழுந்துவிட்டாள்.

அவளுடைய கண்களில் அவன் அந்தச் சோகத்தை கண்டான்.

"நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன? இங்கு என்ன செய்கிறீர்கள்? எல்லாவற்றையும் அறிய விரும்புகிறேன்", கேட்டான் ராமன்.

"என்னிடமிருந்து ஒரு பதிலும் வராது. இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது நீங்கள்தான். வெளிப்படையாக பேசுங்கள். மேலும் திரும்பித் திரும்பிக் கேட்க நான் விரும்பவில்லை", கூறினாள் அவள்.

"எப்படியோ ஒரு வழியில் நாம் எல்லோருமே பைத்தியம்தான். ஆகையால் நான் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறேன் என்பது இங்கு முக்கியம் இல்லை", என்றாள் அவள்.

ராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். இப்பொழுது பதில் சொல்லாவிட்டால் அவள் போய்விடுவாள் என்பதையும் புரிந்து கொண்டான்.

"இது ஒரு பெரிய கதை. கவனமாக கேளுங்கள்", என்ற ராமன் ஆரம்பித்தான். அவர்கள் மேலும் இரண்டு கப் காப்பி கொண்டு வரச் சொன்னார்கள். அவனுடைய கதையைக் கேட்பதற்கு அவள் மிகவும் ஆவலாக இருந்தாள்.

"கதைகளோ அல்லது கனவுகளோ அவற்றை நான் விரும்புகிறேன். உங்கள் கதையும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்", புன்னகையுடன் அவள் கூறினாள்.

"30௦ நிமிடங்களில் நான் போக வேண்டும். எனது பெற்றோர்கள் எனக்காக காத்திருப்பார்கள்", தொடர்ந்து கூறினாள் அவள்.

"சிங்கப்பூர் உங்கள் சொந்த ஊரா?" அவன் கேட்டு முடிக்கும் முன்பே, அவள் அவனைப் பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டாள், எழுந்து சென்றுவிட்டாள்.

சாப்பிட்டதற்கு மேசை மேல் சில சிங்கப்பூர் டாலர் நோட்டுக்களை வீசிவிட்டு ராமன் அவள் பின்னால் ஓடினான்.

"நில்லுங்கள் நான் நடந்ததையெல்லாம் சொல்லுகிறேன்", சற்று உயர்ந்த குரலில் கூறினான் ராமன்.

"இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது", என்றாள் அவள்.

அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவள் அமைதியில்லாமல் இருந்தாள். எல்லாவற்றையும் உடனே அறிய விரும்பினால். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் ஒரே மாதிரித்தான் என்று அவள் நினைத்தால். கூட்டமிருந்த பூங்காவில் நுழைந்து ஒரு மூலையில் அவர்கள் அமர்ந்தார்கள். அவள் தனது காதைக் காட்டி அவனது கதையை கேட்பதற்கு தயாராக இருப்பதாக ஜாடை காட்டினாள். அவளிடமிருக்கும் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ராமன் அவளிடம் தனது மாமாவின் சிங்கப்பூர் பயணப் பரிசைப் பற்றிச் சொன்னான். அவன் தனது சுதந்திரத்தை மிகவும் விரும்புவதால் தனியாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் சொன்னான். தான் எடுத்த முடிவு மிகவும் சரியானதே என்று சிரித்துக்கொண்டே சொன்னான். ஒரு பயணக்குழுவுடன் வந்திருந்தாள் இவ்வளவு நேரம் செலவழித்து என்னால் அவளை கண்டு பிடிக்க முடிந்திருக்குமா? என்று எண்ணினான். அவனுடைய சிரிப்பை அவள் ரசித்தாள். அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான் என்றும் எண்ணினால். அவளைவிட அவன் நிச்சயமாக 10 செ.மீ. உயரமாக இருப்பான். கல்லூரியில் தனது தோழிகளுடன் இளைஞர்களைப் பற்றிப் பேசியதையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் மிகவும் சோர்ந்து போயிருக்கிறான். அதன் காரணத்தை எப்படியும் கண்டுபிடித்து விடுவேன் என்று அவள் நம்பினாள். அவன் மெதுவாக அவளிடம் நடந்ததையெல்லாம் விரிவாகக் கூறினான். லிட்டில் இந்தியாவில் நடந்ததைப் பற்றியும் கிளி ஜோஷ்யரைப் பற்றியும் கூறினான். அவன் கூறுவதை அவள் மிகக் கவனமாகக் கேட்டால். அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனதில் ஆழமாகப் பதிந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தது, இந்த அழகான, கவர்ச்சியான, வினோதமான இளைஞனைச் சந்திப்பதற்காகத்தானோ என்று எண்ணினாள். இதனால்தான் மாரியம்மன் கோவிலில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மெதுவாக அவன் சொல்லி முடித்தான்.

அவளது கண்கள் மூடியிருந்தன. அவன் சொன்னதை அவள் ஜீரணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் போலத் தோன்றியது. ராமன் அவளது கவர்ச்சியான முகத்தை ஆசையோடு நோக்கினான். இவளுக்காக எனது சென்னை திரும்பும் பயணம் வரை கூடக் காத்திருப்பேன் என்றும் அவன் எண்ணினான்.

"லிட்டில் இந்தியாவிற்குப் பொய் கிளி ஜோஸ்யரைத் தேடுவோம்", என்று கூறிய அவள், வந்த ஒரு டாக்சியையும் நிறுத்தினாள்.

டாக்சி டிரைவரிடம் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகும்படி கூறினாள். டாக்சியில் இரவருமே தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி அமைதியாக இருந்தார்கள். அங்கு எந்த இடத்தில் கிளி ஜோஸ்யரைப் பார்த்தான் என்பதை காட்டினான். அங்கு பக்கத்திலிருந்த கடைகளிலெல்லாம் விசாரித்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக யாருமே அவரைப் பார்க்கவில்லை. இறுதியில் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோர்களைச் சந்திக்கலாம் என்று அவள் கூறினாள். ஒரு வேலை அவள் தாய் அவனுக்கு நல்ல சாப்பாடு போடலாம் என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள்.

"அப்படியானால் நீங்கள் சிங்கப்பூர்வாசிதானே", என்று அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் கேட்டான்.

"ஆமாம், நான் கடந்த 14 நாட்களாக இங்கு இருக்கிறேன். இன்னும் சில நாட்களுக்கு இங்கு இருப்பேன்", அவள் சிரித்துக் கொண்டே பதிலளித்தால்.

"என் பெற்றோர்களை இங்கு விட்டுவிட்டுத் தனியாக நான் இந்தியாவிற்குத் திரும்பிப் போக வேண்டும்", தொடர்ந்தாள் அவள்.

அவள் கண்களில் கண்ட சோகத்தை இப்பொழுது புரிந்து கொண்டான்.

"ஏன் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இங்கு தங்கக் கூடாது? சிங்கப்பூர் மிக நல்ல இடம்தானே", என்றான் ராமன்.

"எனது முதுநிலைப் படிப்பை மதுரையில் முடிக்க விரும்புகிறேன். அதன் பிரக் எம்.பி.ஏ. படிக்க இங்கு திரும்பி வருவேன். எனது பெற்றோர் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு ஒரே பெண். அவர்களை 2 வருடத்திற்கு நான் இங்கு தனியாக விட்டுச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் அதைக் காட்டினால்தான் நான் இன்னும் கவலைப்படுவேன் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்", என்றாள் அவள் மெதுவாக.

"நீங்கள் மேற்கொண்டு எதுவும் அறிய விரும்பினால் அவர்களிடமே நேரில் கேட்டுக்கொள்ளுங்கள். வாருங்கள், போகலாம்", என்று கூறிவிட்டு அவள் டாக்சி ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8