அது ஒரு பங்களா. சிறிய, ஆனால் அழகாக பராமரிக்கப்பட்ட தோட்டமும் அதைச் சுற்றி இருந்தது. அவள் கதவைத் திறந்தாள். இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"அப்பா, அம்மா, இங்கே பாருங்கள். நான் ஒரு விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்", என்று உரத்த குரலில் கூறினாள் அவள்.

அவர்கள் முன் அறையில் காத்திருந்தார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவரும் அவரது மனைவியும் வந்தனர்.

இவர்கள் என் பெற்றோர்கள். இவர்... அவன் பெயர் தெரியாமல் அவள் தயங்கினாள். இன்று நடந்த குழப்பத்தில் அவள் அவனது பெயரை இன்னும் சரியாக காத்து கொடுத்துக் கேட்கவில்லை. அவள் புன்முறுவலுடன் ராமனை அவளது பெரிய கண்களால் நோக்கினான்.

"உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள் நாணத்துடன்...

"எனது பெண் ஒரு பெயர் தெரியாத விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்", என்று கூறிய அவள் தந்தை பலமாகச் சிரித்தார்.

ராமனின் முகம் சிவந்துவிட்டது. "எனது பெயர் ராமன். நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன், ஐயா", என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"நான் அருணாச்சலம்", என்றார் அவள் தந்தை. அவர்கள் தங்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். "என்னிடம் சீதா இல்லை, ஆனால் கீதா இருக்கிறாள்", தனது மகளைச் சுட்டிக் காட்டினார் அவர்.

"இப்பொழுது அவளின் பெயரும் எனக்குத் தெரியும்", கூறிச் சிரித்தான் ராமன். அவளது அம்மாவிற்கும் அவன் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான். அங்குள்ள சோபாவில் அமர்ந்தார்கள்.

"காப்பி, தேநீர் அல்லது பழச்சாறு - மாம்பலம், ஆரஞ்ச், அன்னாச்சிப்பழம் மற்றும் எலுமிச்சையும் இருக்கிறது", என்று கூறிய கீதா, அவன் பதிலளிக்கும் முன்பே தனது தாயிடம் கூறினாள்.

"அம்மா, அவருக்கு நல்ல பசி. சோறு, சாம்பார், காய்கறிகளுடன் தென்னிந்தியச் சாப்பாட்டைச் செய்யுங்களேன்."

ராமன் வேண்டாமென்று மெதுவாகத்தான் மறுத்தான். தண்ணீர் மட்டுமே போதுமே என்று கூறினான்.

"அரை மணி நேரத்திற்குள் நான் ஏதாவது சமைக்கிறேன்", கீதாவின் அம்மா கூறினாள். கீதாவும் அம்மாவிற்கு உதவி செய்ய விரும்பியதால் இருவரும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

"ராமன், உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றார் அருணாச்சலம். "உங்களைப் பார்த்தால் ஒரு உல்லாசப் பயணி போல் இருக்கிறது."

ராமன் தான் சிங்கப்பூருக்கு வந்ததின் காரணத்தை அவரிடம் கூறினான்.

"நான் B.E. முடித்துவிட்டேன். ஒரு வருடம் வேலை பார்த்த பிறகு M.E. படிக்கப் போகிறேன். ஆனால் எனது குறிக்கோள் பின்னால் Ph.Dயையும் முடித்துவிட்டு மக்களுக்கு உபயோகமான ஆராய்ச்சிகள் செய்வதுதான்", கூறினான் ராமன்.

"மிகவும் நல்லது. நாங்கள் டாக்டர் பட்டம் இல்லாமலேயே வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் இந்தக் காலத்தில் அது இல்லாமல் முன்னேறமுடியாது", அவர் கூறினார்.

"ஜெர்மனியில் இருக்கும் எனது மாமா, எங்கு அதிகம் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றனவோ அங்குதான் நல்ல சம்பளமுள்ள வேலைகளும் உருவாக்கப்படும் என்று அடிக்கடி கூறுவார்", என்றான் ராமன்.

"இது மிகவும் ஞானமுள்ள வாக்கியம்", என்றாம் அருணாச்சலம்.

"உங்கள் கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது? உங்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்களா?" அவர் கேட்டார். "உங்களைச் சுற்றி பெண்கள் வரவில்லையா?" மேலும் கேட்டுச் சிரித்தார்.

"ஐயா, எனக்கு ஆண், பெண் நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு ஒழுக்கத்தைப் பற்றிய கோட்பாடுகள் மிகவும் முக்கியமானவை. பெண்களை நான் மிகவும் மதிப்பவன். ஒரு பெண்ணை மனதில் கூட நான் தவறான எண்ணத்தில் பார்ப்பதில்லை", மிகத் தீர்மானமான குரலில் அவன் சொன்னான்.

"உங்கள் கொள்கை மிகவும் உயர்ந்தது", என்றார் அருணாச்சலம்.

"இவனை அடையக் கொடுத்து வைத்திருக்கும் அதிர்ஷ்டமான பெண் யாரோ?" என்று அவர் மனம் எண்ணியது. அவர்கள் இந்திய அரசியலைப் பற்றி, பணச் சந்தையிலிலுள்ள பிரச்சினைகள், சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் மற்றும் ஆண்கள் பேசும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராமனின் விரிவான, கூர்மையான அறிவு அருணாச்சலத்தை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாம்பார், வெண்டைக்காய் பொரியல், ரசம், தயிருடன் கிடைத்த தென்னிந்திய உணவை ராமன் மிகவும் ரசித்துச் சாப்பிட்டான்.

"கீதா இன்று முதல்முறையாகச் சமையல் செய்ய உதவியதால் சீக்கிரம் முடிந்தது", என்றால் கீதாவின் அம்மா.

முதன்முறையாக கீதாவின் முகம் சிகப்பானத்தை அவன் கவனித்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

"எப்பொழுது சென்னைக்குப் போகிறீர்கள்", அருணாச்சலம் கேட்டார்.

இதற்குள் சாப்பாடும் முடிந்தது.

"ஞாயிற்றுக்கிழமை நான் சென்னைக்குச் செல்கிறேன். சிங்கப்பூரை பார்ப்பதற்கு இன்னும் எனக்கும் 3 நாட்கள் இருக்கின்றன", ராமன் பதிலளித்தான்.

"சிங்கப்பூரை அவருக்கு சுற்றிக்காட்ட விரும்புகிறேன். நான் இரண்டு தடவையாவது எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அம்மா, உங்கள் அனுமதியுடன் நானே இவருக்கு சுற்றிக்காட்டலாமா?" கீதா குறும்புச் சிரிப்புடன் அம்மாவைக் கேட்டாள்.

"மாலைச் சாப்பாட்டிற்கு நீங்கள் இருவரும் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தால் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது", அம்மா சாந்தமாக சொன்னாள்.

"எனக்கு சம்மதமே", அம்மா சொன்னதை ஆமோதித்தார் அருணாச்சலம்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போவதாக ராமன் சொன்னான். சிறிது நேரம் கழித்து அருணாச்சலம் அவனைத் தனது காரில் அவனது ஹோட்டலில் இறக்கிவிட்டார்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8