மரபணுக்கள் இதற்குக் காரணமா என்பது நிச்சயமாக ஒருவருக்கும் தெரியாது. ஆனால் விஞ்ஞானத்தின் மூலமான விளக்கம் மிகவும் சுலபமானது. நமது உணவில் மிக அதிகமாக மாவுப்பொருட்களைச் சேர்த்துக்கொண்டால் சீனியின் அளவு இரத்தத்தில் கூடுகிறது. சக்தியைக் உருவாக்க சீனி இன்ஸுலினின் உதவியோடு எல்லா அணுக்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் பிறகும் சீனியின் அளவு இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அதிலிருந்து பெரும்பகுதி ஈரலுக்கு அனுப்பப்பட்டு அங்கு டிரைக்ளிஸரைட்ஸ் என்ற கொழுப்பாக மாற்றப்படுகிறது.

இதைப்போல அளவுக்கு அதிகமான ஃப்ருக்டோஸும் (பழச் சர்க்கரை) ஈரலில் டிரைகிளிஸரைட்ஸாக மாற்றப்படுகிறது.

அளவுக்கு மீறிய புரதத்தைச் சாப்பிட்டால் தேவைக்குப் போக மீதி சீனியாக மாற்றப்படுகிறது. இதனால் சீனியின் அளவு இரத்ததில் கூடும்போது அதுவும் டிரைகிளிஸரைட்ஸாக மாற்றப்படுகிறது.

இதனால்தான் நாம் மாவுப்பொருட்கள், புரதம் முதலியவற்றை அளவாகச் சாப்பிடவேண்டும். சீனி, மைதாமாவைக் குறைந்த அளவு உபயோகிக்க வேண்டும். ஃப்ருக்டோஸ் சேர்க்கப்பட்ட மென்குடிபானங்களைத் தவிர்க்க வேண்டும்.

மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வரும் ஆபத்தை அதிக அளவு இரத்த டிரைகிளிஸரைட்ஸ் கூட்டுகிறது.

மாவுப்பொருட்களின் அளவைச் சாப்பாட்டில் கட்டுப் படுத்துங்கள். சோற்றின் அளவைக் குறைக்க வேண்டும். சப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழமோ அல்லது இனிப்புப் பண்டங்களோ சாப்பிடக்கூடாது. முழுத்தானியப்பொருட்கள் மற்றும் தேவையான உடற்பயிற்சியுடன் எந்த மருந்துகளும் இல்லாமல் டிரைகிளிஸரைட்ஸின் அளவைக் குறைக்க முடியும்.