மாதவிடாயைத் தூண்டும் தன்மை எள்ளுக்கு உண்டு. ஆகையால் கர்ப்பமான பிறகு மூன்று மாதங்களுக்கு எள் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.

எள்ளிற்கு மாதவிடாயைத் தூண்டும் தன்மையிருப்பதால் திடீர் கருச்சிதைவு உண்டாகச் சந்தர்ப்பம் இருக்கிறது. இது கர்ப்பிணி மற்றும் அவள் சாப்பிடும் எள்ளின் அளவைப் பொறுத்திருக்கிறது.

பாட்டி வைத்தியத்தில் பிரச்சினையில்லாத, பாதுகாப்பான கருச்சிதைவுக்கு எள் பயன்படுத்தப்படுகிறது. கருச்சிதைவு பொதுவாக பெண்ணின் உடம்பையும் மனதையும் பாதிக்கக்கூடியது. பலரால் வாழ்நாள் முழுவதும் இதை மறக்க முடியாது. இது ஒரு பெரிய உளவியல் பிரச்சினையாகவும் ஆகலாம்.

மருத்துவரிடம் கலந்தாலோசித்து நல்ல, பாதுகாப்பான கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதுதான் உங்கள் ஆரோக்கியதிற்குச் சிறந்தது.