சரியான தூக்கமில்லாததால் மறுநாள் காலையில் ராமன் மிகவும் சோர்வாக இருந்தான். எழுந்திருக்க மனமில்லாமல் எந்தவித குறிக்கோளுமில்லாமல் படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து விரைவாக எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். ஆனால் காலை உணவை உண்ண அவனுக்கு விருப்பமில்லை. ஒரு கப் காபியை மட்டும் குடித்துவிட்டு லிட்டில் இந்தியாவிற்கு கிளம்பினான். கிளி ஜோஸ்யரிடம் பேச விரும்பினான். ஆனால் எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. மறுபடியும் கிளி ஜோஸ்யரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்.

"மாரியம்மன் கோவிலுக்குப் போய் உனது இளவரசியைப் பார்" என்ற வார்த்தைகள் ஒழித்துக் கொண்டே இருந்தன. ஒரு வேளை அவளைத் தவற விட்டு விடுவேனோ என்று எண்ணியதுமே அவன் மிகவும் திகிலடைந்தான். விரைவாக ஒரு டாக்சியில் மாரியம்மன் கோவிலை அடைந்தான் ராமன்.

அது ஒரு புழுக்கமான நாள். அதிக மக்கள் அங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு எல்லா இந்தியர்களையும் பார்த்தான். ஏறக்குறைய எல்லா இனத்தவரும் அங்கு காணப்பட்டனர். ஆனால் அழகான முகத்துடன், சோகமான கண்களுடன், நீல நிறச் சேலையணிந்த பெண்ணை அவனால் அங்கு காண முடியவில்லை. "அவளை இன்று பார்த்தல் பின் தொடர்ந்து செல்ல மாட்டேன். நான் காத்திருக்காமல் உடனே பேசுவேன்," என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். காத்தக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாளைப் போல நீண்டதாக இருக்கிறது என்று எண்ணினான். தான் இன்னும் இரண்டு நாட்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்த அதே ராமன்தானா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது. ஏழு மணி நேரத்திற்கு மேலாக அவன் காத்துக்கொண்டிருந்தான். காலை உணவும், மதியச் சாப்பாடும் இல்லாமல் அவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். "நான் நேற்றுப் பார்த்தது ஒரு மாயத்தோற்றம்", என்று எண்ணினான். ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையும், எக்காரணத்தைக் கொண்டும் இன்று அவளைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் அவனிடம் வலுவாக இருந்தது. மிகுந்த ஏமாற்றத்தால் அவன் தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கினான். அதற்குக் காரணம், இப்பொழுது அவன் அந்த நீல நிறச் சேலையை அணிந்த அழகியின் மேல் ஒரே குறியாக இருப்பதுதான் என்று எண்ணினான். அதே நேரத்தில் இந்தத் தெரியாத பெண்ணிற்காகத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோமே என்று ஆச்சரியப்பட்டான்.

இறுதியாக இன்னொரு நீல நிறப் புடவையணிந்து அந்த இளம் பெண் லட்சணமாக வந்தால். அவள் கோடி போல் மெலிந்து அழகாக இருந்தாள். கம்பீரமான தோற்றத்துடன் ஆனால் சோகமான கண்களுடன் அவள் அவனைக் கடந்து சென்றாள். அவனது உயரத்திர்க்கேற்றவளாகவே அவள் இருக்கிறாள் என்று எண்ணினான். அவள் முடி மிகவும் நீளமாக இருந்தது. அவளைப் போன்ற ஒரு அழகியை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. இப்பொழுது அவனது பசி மற்றும் சோர்வும் பறந்து போய்விட்டது. அவருடன் உடனே பேச விரும்பினான். ஐந்து பெரிய எட்டில் அவளை அடைந்து "என்ன, எப்படி இருக்கிறீர்கள்," என்று முகம் முழுவதும் சிரிப்புடன் அவளைக் கேட்டான், அவள் நின்றாள்.

"ஹலோ, என்ன வேண்டும் உங்களுக்கு?" அவள் கேட்டாள்.

"நான் இந்தியாவிலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். உங்களுடன் பேச விரும்பிகிறேன்," என்றான் ராமன்.

"நானும் இங்கு புதிதுதான்," என்று தனது அழகான பேசும் கண்களுடன் அவள் பதிலளித்தாள்.

"அது நல்லது, அப்படியானால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் சேர்ந்தே சுற்றிப்பார்கலாமே," அவன் ஆலோசனை கூறினான்.

"நீங்கள் சோர்வாகக் காணப்படுகிறீர்களே?" அவள் கேட்டாள்.

அவன் அந்தக் கேள்வியைச் சட்டை செய்யவில்லை.

"எவ்வளவு நாட்களாக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்?" அவன் கேட்டான்.

"இரண்டு வாரங்கள், நான் எல்லாவற்றையும் அநேகமாகப் பார்த்து விட்டேன். இந்தக் கோவில் மிகவும் அற்புதமானது. இங்கு நான் தினமும் வந்து கொண்டிருக்கிறேன்." அவள் பதிலளித்தாள்.

அவளது வார்த்தைக்கு புள்ளி வைக்கும் வேலையில் "தினமும் ஒரு நீல நிறப் புடவையுடன்தானா?" அவன் புன்முறுவலுடன் கேட்டான்.

"எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.

"நான் வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. நான் இன்னும் ஒன்றுமே பார்க்கவில்லை," அவன் சிரித்தான்.

அழகான கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். அவளது நெற்றியில் உண்டான சுருக்கங்களைக் கூட ராமனால் காண முடிந்தது. "உங்களுக்கு என்ன ஆயிற்று?" ஏன் இவாளவு சோர்வாக இருக்கிறீர்கள்? இந்த கேள்விகளைக் கேட்ட அவளது முகமும் குரலும் அவளது கவலையை காட்டியது. "உடம்பு சரியில்லையா?" கேட்டாள் அவள்.

"நேற்று மதியத்திலிருந்து சாப்பிடாமல் உங்களுக்காக இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன்," ராமன் மெதுவாக முணுமுணுத்தான்.

அவளது கண்களில் உண்டான ஆச்சரியத்தை அவன் கவனித்தான். சில நொடிகள் அவள் மெளனமாக இருந்தாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனது நரம்புகள் தளர்ந்துவிட்டன. மிகுதியான சோர்வை இப்பொழுதான் அவனால் உணர முடிந்தது.

"நாம் எங்காவது ஒரு உணவகத்தில் உட்கார்ந்து பேசலாமா?" என்று கேட்டான் ராமன்.

"எனக்கு ஆட்சேபனையில்லை. பக்கத்தில் ஒரு உணவகம் இருக்கிறது. நாம் அங்கு போகலாமே", அவள் பதிலளித்தாள். அவள் நடக்க ஆரம்பித்தால். அவனும் மெளனமாக அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் எதுவும் பேசாமல் ஐந்து நிமிடங்கள் நடந்தார்கள். அவர்கள் உணவகத்தில் நுழைந்தார்கள். அவள் சாலையை பார்க்கும்படியாக ஜன்னல் பக்கத்திலிருந்த மேசைக்குச் சென்றாள்.

"என்ன சாப்பிடப் போகிறீர்கள்?" அவள் அவனைக் கேட்டாள்.

"நான் ஒரு மிகப்பெரிய ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறேன். எனக்கு பசி மிகவும் அதிகம்", ராமன் மெதுவாகச் சொன்னான்.

"நான் ஒரு கப் காபி குடிக்கப்போகிறேன்", என்றாள் அவள். இவற்றை அவள் சர்வரைக் கொண்டு வரச் சொன்னாள்.

அவர்கள் இருவரும் அங்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில், "இனிமேல் என்ன நடக்கப் போகிறது", என்று தன்னைத்தானே அவன் கேட்டுக்கொண்டான். நடந்தது எல்லாவற்றையும் அவன் அவளிடம் சொல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் அதைக்கேட்டவுடன் அவனைப் பைத்தியக்காரன் என்று நினைப்பாளோ என்று அஞ்சினான். அவள் அவனது கண்களை கூர்ந்து நோக்கினாள். அவன் ஏன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று வியந்தாள். அவன் யார் என்பது அவளுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது. அவன் அவளுக்கு அந்நியன். ஆனால் அவனோடு இங்கு உட்கார்ந்து, காப்பி சாப்பிட்டு அவனது கதையை கேட்பதை அவள் விரும்பினால். ஊர், பெயர் தெரியாத இந்த இளைஞனுக்கு அவள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பது அவளுக்கே விளங்கவில்லை.

ராமன் ஐஸ்கிரீமை மிக வேகமாகச் சாப்பிட்டுமுடித்துவிட்டான். அவள் அவன் சாப்பிடுவதைக் கூர்மையாகக் கவனித்து கொண்டிருக்கும் நேரத்தில் "என் கதையைக் கேட்டால் இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாளோ? என்னைப் பைத்தியம் என்று நினைப்பாளோ? என்னை உதாசீனம் செய்துவிடுவாளோ?" எண்ணினான் அவன். அவனது மனதுக்குள் சில சஞ்சலங்கள் தோன்றின.

"எதற்காக எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது," அவள் கேட்டாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8